ஆப்நகரம்

சுவாதியை தொடர்ந்து நவீனா!

காதலிக்க மறுத்ததால் இளைஞர் ஒருவர் இளம்பெண்ணை தீயிட்டு கொலை செய்ய முயற்சி செய்துள்ளார்.

TOI Contributor 31 Jul 2016, 7:51 pm
விழுப்புரம் : காதலிக்க மறுத்ததால் இளைஞர் ஒருவர் இளம்பெண்ணை தீயிட்டு கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். மென் பொறியாளர் சுவாதியின் கொலையை தொடர்ந்து மற்றுமொரு கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. செந்தில் என்பவர் தனியார் போக்குவரத்து நிறுவனம் ஒன்றில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவர் சில வருடங்களாக நவீனா எனும் பதின்வயது பெண்ணை பின்தொடர்ந்து காதலிக்குமாறு வற்புறுத்தியுள்ளார். இதற்கிடையே நிகழ்ந்த விபத்து ஒன்றில் செந்தில் வலது கை மற்றும் காலை இழந்துள்ளார். கை, கால்களை இழந்ததால் தான் நவீனா தன்னை வெறுக்கிறார் என்று கருதி அவரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.
Samayam Tamil man fired himself hugs a girl
சுவாதியை தொடர்ந்து நவீனா!


ஜூலை 30 அன்று நவீனாவின் வீட்டிற்கு வெளியே மறைந்திருந்த செந்தில் நவீனாவின் பெற்றோர் வெளியே செல்லும் வரை காத்திருந்து, பின்னர் வீட்டிற்குள் புகுந்து நவீனா அவரது சகோதரன் மற்றும் சகோதரியை கத்தியை காட்டி மிரட்டியுள்ளார். நவீனாவை தீயிட்டு கொல்ல முயற்சி செய்து முடியாமல் போனதால், தன் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொண்ட செந்தில், நவீனாவை தாக்கியுள்ளார். சத்தம் கேட்டு பக்கத்து வீட்டுக்காரர்கள் வீட்டிற்குள் வர செந்தில் உயிரிழக்கவே, 80 சதவீத காயங்களுடன் உயிருக்கு போராடும் நிலையில் நவீனா புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அடுத்த செய்தி