ஆப்நகரம்

தலையில் பாறாங்கல்லை போட்டு தினக் கூலி சென்னையில் கொலை

தினக் கூலி ஒருவரை தலையில் பாறாங்கல்லை போட்டு மர்ம நபர்கள் கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

TOI Contributor 12 Apr 2016, 7:54 pm
சென்னை: தினக் கூலி ஒருவரை தலையில் பாறாங்கல்லை போட்டு மர்ம நபர்கள் கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil man found dead with head smashed near chennai
தலையில் பாறாங்கல்லை போட்டு தினக் கூலி சென்னையில் கொலை


சென்னை அருகே திருமழிசையில் தினக் கூலி ஒருவரை தலையில் பாறாங்கல்லை போட்டு மர்ம நபர்கள் கடந்த திங்கள்கிழமை இரவு கொலை செய்துள்ளனர். உயிரிழந்த நிலையில் கிடந்த சடலத்தை மறுநாள் கண்ட பொதுமக்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், உடலை மீட்டு திருவள்ளூர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், கொலை செய்யப்பட்ட நபர் கருப்பன் ராஜகோபால் (55) என்று அவரது சகோதரர் மூலம் அடையாளம் கண்டுள்ளனர்.

மேலும், தனது மனைவி மற்றும் குழந்தைகளை பிரிந்து வாழ்ந்து வந்த கருப்பன் ராஜகோபாலை, கள்ள உறவு காரணமாக யாரேனும் கொலை செய்திருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி