ஆப்நகரம்

5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது

வேலூர் அருகே 5 வயது சிறுமியை பாலியல் தொல்லை கொடுத்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

TNN 18 Apr 2017, 5:47 pm
வேலூர்: வேலூர் அருகே 5 வயது சிறுமியை பாலியல் தொல்லை கொடுத்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
Samayam Tamil man held for sexually abusing neighbours 5 year old daughter in tn
5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது


வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அலமேலு மங்கைத்தாயார் சேது என்பவர் மீது குழந்தைகள் பாலியல் வன்புணர்ச்சி குற்றப் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளார். கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி பிற்பகல் 3 மணியளவில், குப்பை கொட்ட சென்றபோது தனது பின்னால் வந்த பேத்தியை வீட்டிற்குச் செல்லுமாறு பாட்டி கடிந்துள்ளார்.

பாட்டி சொன்னதை கேட்டு வீட்டிற்கு திரும்பி வந்த சிறுமியை சேது(45), அவரது வீட்டிற்குள் அழைத்துச் சென்று பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார். இதைத் தொடர்ந்து சிறுமிக்கு ரூ.2 இதனை யாரிடமும் சொல்லக் கூடாது எனவும் மிரட்டியுள்ளார்.

இச்சம்பவம் குறித்து பெற்றோர்களிடம் மறைத்த சிறுமி, சிறுநீர் கழிக்கும்போது வலி ஏற்படுவதாக தெரிவித்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த தாய் சிறுமியிடம் விசாரித்தபோது, அவர் நடந்த சம்பவத்தை கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து சிகிச்சைக்காக வேலூர் கிறிஸ்டியன் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, மருத்துவர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக சிறுமியின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில் சேதுவை கைது செய்த காவல்துறையினர் அவரை நீதிமன்ற காவலில் வைத்துள்ளனர்.

A 45-year-old mason has been arrested for sexually assaulting his neighbour's five-year-old daughter in Vellore.

அடுத்த செய்தி