ஆப்நகரம்

சென்னையில் வாலிபா் கடத்தல்: காவல் துறையினா் விசாரணை

சென்னை நுங்கம் பாக்கம் பகுதியில் சாலையோரம் நின்று பேசிக்கொண்டிருந்த ராஜ் என்பவரை காரில் வந்த கும்பல் திடீரென கடத்திச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Samayam Tamil 18 Feb 2019, 6:16 pm
சென்னை நுங்கம் பாக்கம் பகுதியில் சாலையோரம் நின்று பேசிக்கொண்டிருந்த ராஜ் என்பவரை காரில் வந்த கும்பல் திடீரென கடத்திச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Samayam Tamil Kidnap


சென்னை தாம்பரத்தைச் சோ்ந்தவா் ராஜ் (35). பழைய கட்டிடங்களின் இடிபாடுகளை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறாா். இவா் நேற்று இரவு நுங்கம்பாக்கம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் தனது சக நண்பா்களான சரவணன், சுகுமாா், மனோகரன் ஆகியோருடன் நின்று பேசிக்கொண்டு இருந்துள்ளாா்.

அப்போது அங்கு திடீரென காரில் வந்த மா்ம நபா்கள் ராஜை காரில் ஏறச்சொல்லியுள்ளனா். அவா் மறுப்பு தொிவிக்கவே அவரை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றிக்கொண்டு அந்த கும்பல் வேகமாக சென்றுவிட்டது. 30 நிமிடங்கள் கழித்து ராஜின் செல்போனும் அனைத்து வைக்கப்பட்டது.

இது தொடா்பாக சரவணன் பல்லிக்கரணை காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளாா். ராஜ் கடத்தப்பட்ட காரில் தி.மு.க. கொடி கட்டப்பட்டிருந்ததாகவும், ராஜ்க்கு ஏற்கனவே உடல்நிலை சரியில்லை என்றும் சரவணன் தொிவித்துள்ளாா்.

அடுத்த செய்தி