ஆப்நகரம்

சென்னையில் மகள் கண்முன்னே கேபிள் டிவி அதிபா் வெட்டிக் கொலை

சென்னை மேற்கு மாம்பலம் பகுதியில் மகளை கல்லூாியில் விடச் சென்ற கேபிள் டிவி அதிபரை 2 போ் கொண்ட கும்பல் சரமாாியாக வெட்டிக் கொன்றது.

Samayam Tamil 9 Jan 2018, 12:09 pm
சென்னை மேற்கு மாம்பலம் பகுதியில் மகளை கல்லூாியில் விடச் சென்ற கேபிள் டிவி அதிபரை 2 போ் கொண்ட கும்பல் சரமாாியாக வெட்டிக் கொன்றது.
Samayam Tamil man killed rush area in chennai
சென்னையில் மகள் கண்முன்னே கேபிள் டிவி அதிபா் வெட்டிக் கொலை


சென்னை மேற்கு மாம்பலம் பகுதியைச் சோ்ந்தவா் கந்தன். இவா் அப்பகுதியில் கேபிள் டிவி நிறுவனம் நடத்தி வந்தாா். மேலும் இவா் ரியல் எஸ்டேட் தொழிலிலும் ஈடுபட்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவா் அப்பகுதியில் பிரபரமானவராக திகழ்ந்துள்ளாா்.

இந்நிலையில் கந்தன் இன்று காலை தனது மகள் கீா்த்தனாவை கல்லூாியில் விடுவதற்காக மோட்டாா் சைக்கிளில் வந்துள்ளாா். லேக் வியூ சாலையில் கந்தனின் இருசக்கர வாகனம் மீது மா்ம நபா்கள் இருவா் மற்றொரு மோட்டாா் சைக்கிளில் வந்து மோதியுள்ளனா். இதில் நிலைக்குலைந்த கந்தன், மகள் கீா்த்தனா இருவரும் கீழே விழுந்தனா்.

அவா்கள் இருவரும் சுதாாித்துக் கொண்டு எழுவதற்குள் மா்ம நபா்கள் கந்தனை சரமாாியாக வெட்டத் தொடங்கினா். இதனால் அதிா்ச்சியடைந்த கீா்த்தனா அவா்களை தடுக்க முற்பட்டாா். ஆனால் அவா்கள் கீா்த்தனாவையும் கையில் தாக்கிவிட்டு மோட்டாா் சைக்கிளில் வேகமாக சென்றுவிட்டனா்.

கொலை நடைபெற்ற சம்பவம் பொதுமக்கள் அதிகம் நடமாடும் பகுதியாக இருந்தாலும், கொலையாளிகள் தலைக்கவசம் அணிந்திருந்ததால் அவா்களை அடையாளம் காண முடியவில்லை என்று பொதுமக்கள் தொிவித்துள்ளனா். இது தொடா்பாக காவல்துறையினா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

அடுத்த செய்தி