ஆப்நகரம்

போச்சே!! போச்சே!! மீனுக்கு ஆசைப்பட்டு விரல் போச்சே!!

மீன் பிடிப்பதற்கு நாட்டு வெடிகுண்டு உபயோகித்த இளைஞர், தனது விரல்களை இழந்துள்ளார்.

PTI 21 Jun 2016, 12:03 pm
ஈரோடு: மீன் பிடிப்பதற்கு நாட்டு வெடிகுண்டு உபயோகித்த இளைஞர், தனது விரல்களை இழந்துள்ளார்.
Samayam Tamil man loses fingers as bomb used in fishing explodes
போச்சே!! போச்சே!! மீனுக்கு ஆசைப்பட்டு விரல் போச்சே!!


ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த சுரேஷ் மற்றும் அவரது உறவினர் ஆகிய இரண்டு இளைஞர்களும் அருகில் உள்ள பவானி ஆற்றில் மீன் பிடிக்க சென்றுள்ளனர். நாட்டு வெடிகுண்டை பயன்படுத்தி மீன் பிடிக்க அவர்கள் இருவரும் முயன்றுள்ளனர். அப்போது, வெடிகுண்டை ஆற்றில் எறிய முயற்சித்த போது, சுரேஷின் கையிலேயே அந்த குண்டு வெடித்து விபத்துக்குள்ளானது.

இதில், சுரேஷின் வலது கையில் உள்ள ஐந்து விரல்களும் சேதமடைந்தது. தன் கை விரல்களை இழந்த சுரேஷ், தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், நாட்டு வெடிகுண்டுகளை அவர்கள் இருவரும் எங்கிருந்து பெற்றனர் என்பது குறித்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அடுத்த செய்தி