ஆப்நகரம்

பிச்சை எடுப்பதில் தகராறு... இரும்புக்கம்பியால் அடித்து ஒருவர் கொலை!

மதுரை: கன்னியாகுமரி அருகே பிச்சைக்காரர்களுக்கு இடையே நடந்த சண்டையில் ஒருவர் உயிரிழந்தார்.

Samayam Tamil 4 Dec 2018, 1:35 am
கன்னியாகுமரி மாவட்டத்தின் கோட்டாறு பகுதியில் பிச்சை எடுப்பது தொடர்பாக ஏற்பட்ட மோதலில், ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோட்டாறு பகுதியில் உள்ள செயிண்ட் சேவியர் தேவாலயத்தில் 10 நாட்கள் திருவிழா கோலாகலமாக நடக்கும்.
Samayam Tamil 2


இந்த திருவிழா கடந்த நவம்பர் 24ம் தேதி துவங்கியது. இந்நிலையில் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பல பகுதிகளில் இருந்து பிச்சை எடுக்க, பல மாவட்டங்களில் இருந்து, இங்கு வந்திருந்தனர். இந்நிலையில் தூத்துக்குடியில் இருந்து இங்கு வந்த மாசானம் (57 வயது) என்பவர் மற்றொரு பிச்சைக்காரரை, இரும்புக்கம்பியால் கடுமையாக தாக்கியதில் அவர் உயிரிழந்தார்.
அவர் யார் என்ற அடையாளம் தெரியவில்லை. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மாசானத்தை கைது செய்தனர்.

அடுத்த செய்தி