ஆப்நகரம்

சென்னையில் பணத்தை டெபாசிட் செய்வதாக ரூ 11,000 ஏமாற்றிய நபர் கைது!

சென்னையில் பணத்தை டெபாசிட் செய்ய வந்த இளைஞரை ஏமாற்றி ரூ 11,000 பணத்தை திருடிச்சென்ற நடுத்தர வயது நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Samayam Tamil 17 Feb 2019, 12:07 pm
சென்னையில் பணத்தை டெபாசிட் செய்ய வந்த இளைஞரை ஏமாற்றி ரூ 11,000 பணத்தை திருடிச்சென்ற நடுத்தர வயது நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
Samayam Tamil 68031723


மனயிலிருந்து பொன்னேரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் இந்தியன் வங்கியின் எடிஎம்-க்கும் 22 வயதான பாலராமன் பணம் டெபாசிட் செய்ய வந்துள்ளார். பணத்தை டெபாசிட் செய்ய அதிக கூட்டம் இருந்ததால், வரிசையில் நின்றுள்ளார். அப்போது பாஸ்கர் என்பவர், பாலராமனிடம் உதவி செய்வதாக தெரிவித்துள்ளார். வங்கியில் பாலராமனின் பணத்தை டெபாசிட் செய்வதாக உறுதியளித்துள்ளார். இதை நம்பிய பாலராமன் ரூ 11,000 பணத்தை கொடுத்துள்ளார்.

ஆனால் பணத்தை வாங்கிச் சென்ற பாஸ்கரன் வங்கியின் செல்லானுடன் திரும்பி வரவில்லை. இதைத்தொடர்ந்து நடந்த சம்பவம் தொடர்பாக மனலி புதூர் காவல்நிலையத்தில் பாலராமன் புகார் அளித்தார். இதனடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் வங்கியின் சிசிடிவி கேமிராவின் பதிவான காட்சிகளை வைத்து பாஸ்கரனை கைது செய்தனர். அவரிடத்தில் இருந்த ரூ 11,000 பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

பாஸ்கர் என்பவர் மனலியை சேர்ந்தவர் என்றும், தங்க ஆசாரியான இவர் இதற்கு முன்பு இதுபோன்ற திருட்டு வேலைகளில் ஈடுபட்டுள்ளதாக காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அடுத்த செய்தி