ஆப்நகரம்

‘மைனர்’ பெண்ணை ஏமாற்றிய நபர் கைது

மதுரையில் 17 வயதான பெண்ணை திருமணம் செய்வதாகக் கூறி, பலாத்காரம் செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

TNN 22 May 2016, 10:19 pm
மதுரையில் 17 வயதான பெண்ணை திருமணம் செய்வதாகக் கூறி, பலாத்காரம் செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
Samayam Tamil man sexually abuse college girl by promising to marry her arrested
‘மைனர்’ பெண்ணை ஏமாற்றிய நபர் கைது


மதுரை கொடிக்குளம் பகுதியைச் சேர்ந்த தங்கபிரகாஷ் என்ற அந்த இளைஞர், சர்வேயர் காலனியை சேர்ந்த 17வயது மாணவியை காதலித்து வந்துள்ளார். அவரை, திருமணம் செய்துகொள்வதாக, உறுதி அளித்த தங்கப்பிரகாஷ், ஆளில்லாத நேரத்தில் உடல் உறவு கொண்டுள்ளார்.

இதுபற்றி தகவல்தெரிந்ததும், பெண்ணின் குடும்பத்தினர், தங்கப்பிரகாஷை திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தினர். ஆனால், அவர் மறுக்கவே, போலீசில் புகார் செய்யப்பட்டது. தல்லாகுளம் போலீசார், வழக்குப் பதிந்து, அவரை கைது செய்தனர்.

அடுத்த செய்தி