ஆப்நகரம்

3 வயது சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்திய இளைஞர்- பொதுமக்கள் தர்ம அடி..!!

விழுப்புரம்: சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நபரை பொதுமக்கள் பிடித்து உதைத்து போலீசிடம் ஒப்படைத்தனர்.

Samayam Tamil 16 Dec 2018, 5:33 pm
வீட்டுக்கு அருகில் விளையாடிக்கொண்டிருந்த மூன்று வயது சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்திய இளைஞரை பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

விழுப்புரம் அடுத்த தோகைபாடி கிராமம் பிள்ளையார் கோயில் தெருவில் வசித்து வருபவர் இளவரசன். இவர் அதே பகுதியில் மாம்பழ வியாபாரம் செய்து வருகிறார். தோகைபாடி பெட்ரோல் பங்க் அருகே உள்ள மாரியம்மன் கோயில் அருகே விளையாடிக்கொண்டிருந்த 3 வயது சிறுமியை மிட்டாய் கொடுப்பதாக கூறி இவர் அழைத்துள்ளார்.

இளவரசனை தேடி வந்த சிறுமி திடீரென அழ தொடங்கியுள்ளது. அதைக்கேட்டு குழந்தையின் தாய் மற்றும் அக்கம் பக்கத்தினர் இளவரசனை பிடித்து தர்மஅடி கொடுத்து அருகாமையிலுள்ள கானை காவல் நிலையத்திற்கு தெருவில் நடந்தபடியே இழுத்துச்சென்று காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதனையடுத்து காவல்துறையினர் இளவரசன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது குழந்தைக்கு இளவரசன் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறினார்கள். இந்நிலையில் குழந்தையின் பெற்றோர்கள் புகார் அளிக்காத நிலையில் இளவரசன் மீது ஈவ் டீசிங் புகார் வழக்கு பதிவு செய்யப்படும் என கூறி இளைஞரை சிறையில் அடைத்தனர்.

அடுத்த செய்தி