ஆப்நகரம்

முகநூலில் பெண்களை ஆபாசமாக பதிவிட்ட வாலிபர் கைது !

பெண்களை அவமதிக்கும் வகையில் ஆபாசமாக முகநூலில் பதிவிட்ட வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Samayam Tamil 25 Jul 2018, 11:55 am
பெண்களை அவமதிக்கும் வகையில் ஆபாசமாக முகநூலில் பதிவிட்ட வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
Samayam Tamil cyber-bullying-photo


சுதா மற்றும் ரேகா ஆகியோர் சென்னை வசித்துவருகின்றனர். இவர்கள் இருவரும் கொடுத்த புகாரில், ‘மன்னை சிவா’ என்ற பெயரிடப்பட்ட முகநூலில் இருந்து தன்னுடைய முகநூலுக்கு தன்னுடைய புகைப்படத்தை ஆபாசமாக மார்ப்பிங் செய்து ஆபாச வார்த்தைகளுடன் பதிவிட்டு மன உளைச்சலை ஏற்படுத்தி வருவதாகவும் புகார் கொடுத்துள்ளனர்.

இந்த புகார்களின் மீது பாலியல் சார்ந்த ஆபாச படங்களை காண்பிப்பது, இணையதளம் வாயிலாக பெண்களை பின் தொடர்வது, கணிணி மூலம் ஆபாச படங்களை அனுப்புவது, பெண்களின் தனிமையில் குறுக்கீடு செய்வது, பெண்களுக்கு மனரீதியாக உளைச்சளை ஏற்படுத்துவது, பெண்களை ஆபாசமாக சித்தரிப்பது, பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பது போன்ற குற்றங்களுக்காக இந்திய தண்டனைச் சட்டப்பிரிவுகளின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு, சைபர் கிரைம் போலீசார் வழக்குகளை பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் ‘மன்னை சிவா’ என்ற பெயரில் முகநூல் கணக்கு வைத்துக் கொண்டு இதுபோன்ற இழிவான செயலை பதிவிட்டவர் திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி, பருத்தி கோட்டை, வெட்டிக்காடு என்ற ஊரைச் சேர்ந்த சின்னையன் மகன் சிவகுமார் என்று தெரிய வந்தது.

இதனைத்தொடர்ந்து சென்னை மத்திய குற்றபிரிவு, சைபர் கிரைம் போலீசார் அவரைக் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர்.இதன்பிறகு அவரை புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.

அடுத்த செய்தி