ஆப்நகரம்

தினகரனின் பலவீனத்தை ஓபிஎஸுடம் போட்டு கொடுத்த மன்னார்குடி சொந்தங்கள்

தினகரனின் பலவீனத்தையும்,அவரின் திட்டங்களையும் அவரது மன்னார்குடி சொந்தங்கள் ஓபிஎஸிடம் அவ்வப்போது போட்டுக்கொடுப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

TNN 5 Mar 2017, 2:32 pm
தினகரனின் பலவீனத்தையும்,அவரின் திட்டங்களையும் அவரது மன்னார்குடி சொந்தங்கள் ஓபிஎஸிடம் அவ்வப்போது போட்டுக்கொடுப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Samayam Tamil manaarkudi relative sceretly tells dinakarnweekness to ops
தினகரனின் பலவீனத்தை ஓபிஎஸுடம் போட்டு கொடுத்த மன்னார்குடி சொந்தங்கள்



சசிகலா சிறைக்கு செல்வதற்கு முன்பாக டிடிவி தினகரனை கட்சியின் துணைப்பொதுச் செயலாளராக நியமித்தார். பின்னர் கட்சியையும் , ஆட்சியையும் நிர்வகிக்குமாறு தினகரனிடம் கேட்டுக் கொண்டார். மேலும் தினகரன் பேச்சை தான் அனைவரும் கேட்க வேண்டும் என்று வாய் மொழி உத்தரவை பிறப்பித்தார்.

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுக கட்சிக்குள் பெரும் பிளவுகள் ஏற்பட்டது. ஆனால் இந்த பிளவுகளை விட மன்னார்குடி சொந்தகள் தன்னக்கே அதிகாரம் வேண்டும் என்று ஒவ்வொருவரும் சசிகலா அணியில் தனிதனி அணியாக செயல்பபட்டு வருகின்றனர்.

மேலும் சசிகலா சிறை செல்வதற்கு முன்பு கட்சி மற்றும் ஆட்சியின் முக்கிய பொறுப்புகளை சொந்தங்களுக்கு பிரிந்து கொடுப்பார் என அனைவரும் ஏதிர்பார்த்தனர். ஆனால் தினகரனிடமே அனைத்து பொறுப்புகளும் கொடுக்கப்பட்டனர். மேலும் தினகரன் எல்லோரிடத்திலும் ஆதிக்கம் செலுத்தி வருவதால் மன்னார்குடி சொந்தங்கள் தினகரனின் பலவீனம் மற்றும் திட்டங்களை ஓபிஎஸிடம் அவ்வப்போது போட்டுக்கொடுப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது
manaarkudi relative sceretly tells dinakarn'weekness to ops

அடுத்த செய்தி