ஆப்நகரம்

சர்கார் பட டிக்கெட்டை ’பிளாக்’கில் விற்ற திரையரங்க மேலாளர், பாதுகாவலர் கைது

சென்னையில் சர்கார் பட டிக்கெட்டுகளை பிளாக்கில் விற்ற திரையரங்க மேலாளர் மற்றும் பாதுகாவலர் கைது செய்யப்பட்டனர்.

Samayam Tamil 8 Nov 2018, 11:50 am
விஜய் நடிப்பில் வெளிவந்துள்ள ‘சர்கார்’ படத்தின் டிக்கெட்டுகளை பிளாக்கில் விற்ற குற்றத்திற்காக திரையரங்க மேலாளர் மற்றும் பாதுகாவலர் இருவரை போலீஸார் கைது செய்தனர்.
Samayam Tamil sarkar-movie-tickets-cover-pic
’சர்கார்’ டிக்கெட்டை பிளாக்கில் விற்ற திரையரங்க மேலாளர் கைது


ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலக்ஷ்மி, பழ. கருப்பையா உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான படம் ’சர்கார்’. தீபாவளியை முன்னிட்டு வெளியான இந்த படம், நல்ல வசூலை ஈட்டி வருகிறது.

இந்நிலையில், அரசு நிர்ணயித்ததை விட கூடுதலான கட்டணத்தில் ’சர்கார்’ பட டிக்கெட்டுகள் விற்கப்படுவதாக வந்த தொடர்ந்து குற்றச்சாட்டு இருந்து வந்தது.

இந்நிலையில் ஜாபர்கான்பேட் பகுதியில் இப்படத்தின் டிக்கெட் அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதலாக விற்ற தியேட்டர் மேனேஜர் மற்றும் பாதுகாவலரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களிடம் இருந்து ரூ.10,000 மற்றும் 6 சர்கார் பட டிக்கெட்களையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

மேலும், போலீசார் நடத்திய விசாரணையில் கூடுதல் விலைக்கு பிளாக்கில் விற்க சுமார் 50 டிக்கெட்களை பதுக்கி வைத்திருந்ததாகவும், ஒரு டிக்கெட்டிற்கு ரூ.216 என அரசு நிர்ணயம் செய்த விலையை விட கூடுதலாக ரூ.400-க்கு விற்றதாகவும் தெரிவித்துள்ளனர். மொத்தமாக 44 டிக்கெட்களை பிளாக்கில் விற்றது அம்பலமானது. இதை தொடர்ந்து இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

அடுத்த செய்தி