ஆப்நகரம்

“பாஜக முகத்திரையை கிழிக்கத்தான் ஐஏஎஸ் பதவியைத் தூக்கி எறிந்தேன்”

கடந்த 10 ஆண்டுகளாக ஐஏஎஸ் பதவி வகித்து வந்த சென்னை லோக்கல் பையன், பாஜகவின் முகத்திரையைக் கிழிக்கத் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

Samayam Tamil 11 Feb 2020, 12:00 am
சென்னை பெரம்பூரைச் சேர்ந்தவர் சசிகாந்த் செந்தில். ஐஏஎஸ் பதவி மீது கொண்ட காதல் காரணமாக 2002 முதல் சென்னையிலே குரூப் 1 பயிற்சிக்குச் சென்றுள்ளார். இவர் தொடர்ந்து ஐஏஎஸ் தேர்வுகளை எதிர்கொண்டு, 2009ஆம் ஆண்டு தேர்ச்சி பெற்றுள்ளார்.
Samayam Tamil padam-1


கடந்த 10 ஆண்டுகளாக 3 மாவட்டங்களுக்கு ஆட்சியராக பணியமர்த்தப்பட்ட சசிகாந்த் செந்தில், பாஜகவின் பாசிச நடவடிக்கை, மக்கள் விரோத செயல்கள் உள்ளிட்ட காரணங்களால் தனது ஐஏஎஸ் பதவியை ராஜினாமா செய்ததாகக் கூறியுள்ளார்.


காதலித்துத் தேர்வெழுதிப் பெற்ற ஐஏஎஸ் பதவியை ராஜினாமா செய்த சசிகாந்த் செந்தில் தொடர்ந்து மக்கள் மத்தியில் பேசி வருகிறார். அப்படி சமீபத்தில் ஒரு கூட்டத்தில் சசிகாந்த் செந்தில் பேசிய வீடியோ வைரலாக பேஸ்புக், வாட்ஸ் ஆப்பில் பரவி வருகிறது.

அந்த வீடியோவில் சசிகாந்த் செந்தில் பேசியதாவது:
நான் 2009ஆம் ஆண்டு ஐஏஎஸ்ஸில் தேர்ச்சி பெற்று, கர்நாடகாவில் பணியமர்த்தப்பட்டேன். தொடர்ந்து 10 வருடங்கள் வெவ்வேறு இடங்களில் பணியமர்த்தப்பட்டேன். இதுவரை நான் 3 மாவட்டங்களுக்கு ஆட்சியராக இருந்துள்ளேன்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் எப்போது, நடிகர் விஜய்க்கு ஆதரவாக பார்லிமென்ட்டில் பொங்கிய திமுக எம்.பி... இன்னும் பல முக்கியச் செய்திகள்

அரசு அதிகாரிகள் பணியமர்த்தப்படும் மாநிலங்களின் மொழியை கற்றுப் பேசினால் மட்டுமே, மக்களோடு இணைந்து பணியாற்ற முடியும். அதனால் கன்னடம், ஹிந்தி எனக் கடந்த 10 வருடங்கள் எந்த மொழி எது என தெரியாமல், இந்திய பிரஜையாகவே வாழ்ந்ததாகத் தோன்றுகிறது.


தமிழ்நாடு அரசு அளிக்கும் குரூப் 1 பயிற்சி வகுப்பில் சேர்ந்து 2002ல் படித்துக் கொண்டிருந்தேன். நாட்டில் மிகப் பெரிய துயர சம்பவம் அப்போது குஜராத்தில் நிகழ்த்தப்பட்டது. அதாவது கலவரம் ஒன்றில் 2 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டிருந்தனர்.

இந்த கலவரத்திற்கு அரசு துணை நின்றதாக எனக்குத் தோன்றியது. அங்கு அதிகாரிகள் நடத்திய விசாரணையிலும் அம்மாநில அரசு கலவரத்தில் ஒரு தரப்பிற்கு ஆதரவாக இருந்தது தெரியவந்தது. அப்போது நான் ஒரு முடிவெடுத்தேன். கண்டிப்பாகக் குஜராத் கலவரத்தில் தொடர்புடையவர்களை ஒருமுறையாவது நான் நீதிமனறத்திற்கு இழுத்துக் கொண்டு வர வேண்டும் என்பதுதான்.

தோண்டத் தோண்ட கிளம்பும் பூதம்... விஏஓ தேர்விலும் முறைகேடு: இருவர் கைது

அந்த கனவோடு இருந்து வந்த நிலையில், 2016இல் எதிர்பாராத விதமாக அந்த கலவரத்தில் தொடர்புடையவர்களே மத்தியில் ஆட்சி அமைத்து விட்டார்கள். என்னால் அதை ஏற்க முடியவில்லை. சரி அடுத்த தேர்தலில் அது நடக்காது என நான் நம்பினேன். ஆனால் 2016ஐ விட 7 சதவீதம் அதிக வாக்குகளைப் பெற்று மத்தியில் ஆட்சி அமைத்துள்ளனர்.


இதற்குமேல் இந்த பணியைச் செய்வது சரியாக இருக்காது எனக்கு நீண்ட நாட்களாகத் தோன்றியது. இன்னும் 10 வருடங்கள் விட்டால், மத்தியில் நாட்டை ஆட்சி செய்பவர்கள் நாட்டையே விற்று விடுவார்கள். இதனால் பாஜகவினரின் முகத்திரையைக் கிழிக்க முடிவு செய்தேன். பல நாள் யோசித்து எனது பணியை ராஜினாமா செய்யலாம் என முடிவு செய்தேன்.

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலையா: பெ.மணியரசன்

அதன்படி ராஜினாமா செய்தேன். இனியும் என்னைப்போல் பலர் வரவேண்டும். தங்கள் ஐஏஎஸ் பணியைத் தூக்கி எரிந்துவிட்டு நாட்டு மக்களுக்காக வரவேண்டும். பணியை ராஜினாமா செய்தபோது தொடர்ந்து ஒரு வருடம் மக்கள் மத்தியில் பேச வேண்டும் என முடிவு செய்தேன். அனைவரையும் இணைக்க முடிவு செய்தேன்.

ஆனால் இப்போது கடந்த 3 மாதங்களாக அது தானாகவே நடந்து வருகிறது. இதைச் செய்ததுக்கு அவர்களுக்குத்தான்(பாஜக) நாம் நன்றி சொல்ல வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

அடுத்த செய்தி