ஆப்நகரம்

பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரரை தாக்கிய புகாரில் தேடப்பட்ட மணிகண்டன் சரண்!

பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரரை தாக்கிய புகாரில் தேடப்பட்டு வந்த மணிகணடன் இன்று காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

Samayam Tamil 25 Mar 2019, 1:25 pm
பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரரை தாக்கிய புகாரில் தேடப்பட்டு வந்த மணிகணடன் இன்று காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
Samayam Tamil pollachi 3.


நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் பொள்ளாச்சியல் இளம் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது. இச்சம்பவத்தில் ஈடுபட்ட திருநாவுக்கரசு, சபரி ராஜன், வசந்தகுமார் மற்றும் சதீஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களிடம் சிபிசிஐடி போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரரை தாக்கியதாக மணிகண்டன் மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இதையடுத்து, அவர் தலைமறைவானதாக கூறப்படுகிறது. பல்வேறு இடங்களில் மணிகண்டனை தேடி வந்த நிலையில், இன்று கோவை காவல் நிலையத்தில் மணிகண்டன் சரணடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி