ஆப்நகரம்

ஐஏஎஸ் அதிகாரிக்கே ஜாதி கொடுமையா.. ககன்தீப் சிங் பேடி மீது ஐஏஎஸ் அதிகாரி பரபரப்பு புகார்.. அதிர்ச்சி

ஐஏஎஸ் அதிகாரி ககன்தீப் சிங் பேடியால் தான் சாதியக் கொடுமைகளுக்கு உள்ளானதாக ஈரோடு கூடுதல் ஆட்சியர் மணீஷ் நர்னவாரே புகார் அளித்திருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

Authored byஜே. ஜாக்சன் சிங் | Samayam Tamil 8 Jun 2023, 12:01 pm
சென்னை: சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த ஐஏஎஸ் அதிகாரி ககன்தீப் சிங் பேடியால் ஜாதி ரீதியான கொடுமைகளுக்கும், துன்புறுத்தலுக்கும் உள்ளாகியதாக கூறி ஈரோடு கூடுதல் ஆட்சியரும், ஐஏஎஸ் அதிகாரியுமான மணீஷ் நர்னவாரே புகார் அளித்திருப்பது பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil Collage Maker-08-Jun-2023-11-59-AM-2101


ஈரோடு கூடுதல் ஆட்சியராக பொறுப்பில் இருக்கும் மணீஷ் நர்னவாரே, இதற்கு முன்பு சென்னை மாநகராட்சியின் சுகாதாரத்துறையில் துணை ஆணையராக பணியில் இருந்தார். அப்போது மாநகராட்சி ஆணையராக இருந்த ஐஏஎஸ் அதிகாரி ககன்தீப் சிங் பேடியால் ஜாதி ரீதியில் பல கொடுமைகளை அவர் அனுபவதித்ததாக தமிழ்நாடு தலைமைச் செயலாளர் இறையன்புக்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

சென்னை மாநகராட்சியில் நான் பணியாற்றிய போது, ஆணையராக இருந்த ககன்தீப் சிங் பேடியால் நான் அனுபவித்த கொடுமைகள் ஏராளம். எஸ்.சி. சமூகத்தைச் சேர்ந்தவன் என்பதால் பணியில் இருக்கும் போது அன்றாடம் துன்புறுத்தப்பட்டேன். மாநகராட்சி ஆய்வுக் கூட்டங்களின் போது என்னை அவமானப்படுத்தும் வகையில் ககன்தீப் சிங் பேடி பல கேள்விகளை கேட்பார். அதில் பெரும்பாலான கேள்விகளை எனது ஜாதியை குறிப்பிட்டே எழுப்புவார்.
கவனமாக இல்லையென்றால்.. பாஜக நுழைந்துவிடும் ஜாக்கிரதை.. முதல்வர் மு.க. ஸ்டாலின் அதிரடி வார்னிங்!
எனது துறை ரீதியான கோப்புகளில் கையெழுத்து வாங்குவதற்காக ககன்தீப்சிங் பேடியின் அறைக்கு சென்றால் கூட, கையெழுத்திடாமல் நீண்டநேரம் என்னை காக்க வைப்பார். அவரது இந்தக் கொடுமைகளால் எனக்கு அடிக்கடி தற்கொலை எண்ணங்கள் கூட வந்திருக்கின்றன. அவர் மீது எஸ்.சி/எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கலாம். எனது புகார் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கிறேன். இவ்வாறு தனது புகாரில் மணீஷ் நர்னவாரே தெரிவித்துள்ளார்.

இந்த புகார் கடிதத்தை இன்று காலை தனது ட்விட்டர் பக்கத்தில் மணீஷ் நர்னவாரே பதிவிட்டிருந்தார். ஆனால் சிறிது நேரத்தில் அந்த பதிவை அவர் நீக்கிவிட்டார். தற்போது ககன்தீப் சிங் பேடி தமிழக சுகாதாரத் துறை முதன்மைச் செயலராக பதவி வகிப்பது குறிப்பிடத்தக்கது.
எழுத்தாளர் பற்றி
ஜே. ஜாக்சன் சிங்
நான் ஜா.ஜாக்சன் சிங். 12 ஆண்டுகள் ஊடகத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். களத்தில் செய்தி சேகரித்த அனுபவமும் உண்டு. தேசிய, சர்வதேச செய்திகளில் ஆர்வம் அதிகம். தமிழக அரசியல் செய்திகளிலும் ஈடுபாடு கொண்டவன். எளிமையாகவும், சுவாரசியமாகவும் மொழிபெயர்ப்பதில் விருப்பம. இப்போது Times Of India சமயம் தமிழில் Digital Content Producer ஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி