ஆப்நகரம்

திருவண்ணாமலை கிராமங்களில் தடையை மீறி மஞ்சு விரட்டு!! 500 காளைகள் பங்கேற்பு!!

திருவண்ணாமலை: கலசப்பாக்கம் அருகே, போலீஸ் தடையை மீறி நடத்தப்பட்ட மஞ்சு விரட்டில் 500க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.

TOI Contributor 14 Jan 2017, 5:56 pm
திருவண்ணாமலை: கலசப்பாக்கம் அருகே, போலீஸ் தடையை மீறி நடத்தப்பட்ட மஞ்சு விரட்டில் 500க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.
Samayam Tamil manju virattu at thiruvannamalai villages 500 bulls participated
திருவண்ணாமலை கிராமங்களில் தடையை மீறி மஞ்சு விரட்டு!! 500 காளைகள் பங்கேற்பு!!


தமிழத்தில் இன்று பெரும்பாலான பகுதிகளில் உச்சநீதிமன்றத்தின் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. தமிழகத்திற்கு காவிரியில் இருந்து நீர் திறந்துவிடுமாறு உச்சநீதிமன்றம் ஆணையிட்டும், அதற்கு கர்நாடகா அரசு மடியவில்லை. அப்போது ஏன் உச்சநீதிமன்றம் கண்டிக்கவில்லை என்று இளைஞர்கள் கேள்வி எழுப்பி இன்று மஞ்சு விரட்டு நடத்தினர்.

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அருகே வீரளூர், மேல்சோழங்குப்பம், ஆதமங்கலம் புதூர், கீழ்பாலூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள, பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் ஆண்டுதோறும் மஞ்சு விரட்டு நடத்தப்படுவது வழக்கம். கடந்த மூன்று ஆண்டுகளாக போலீசார் அனுமதி கொடுக்காதபோதும், மஞ்சு விரட்டு நடத்தி வந்தனர்.

அதேபோல் இன்றும் இவர்கள் நடத்திய மஞ்சு விரட்டில் 500க்கும் அதிகமான காளைகள் கலந்து கொண்டன. கிராம மக்கள் மீது, போலீசார் கடந்த காலங்களில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த ஆண்டும், மஞ்சு விரட்டு நடத்த, 500க்கும் மேற்பட்ட காளை மாடுகளை வளர்த்து பழக்கப்படுத்தி வந்தனர். போகி பண்டியை முன்னிட்டு, நேற்று தங்கள் கிராமங்களில் மஞ்சு விரட்டு நடத்தினர். இதில், 500க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. மஞ்சு விரட்டில், காளை மாடுகளின் கொம்புகளில் பரிசு பொருட்களை கட்டி ஓட விட்டனர். இளைஞர்கள் ஆர்வமுடன் துரத்தி சென்று, பரிசு பொருட்களை எடுத்து தங்களின் வீரத்தை பறைசாற்றினர். ஆயிரக்கணக்கான மக்கள் மஞ்சுவிரட்டு காண குவிந்தனர். வழக்கம் போல் இந்த முறையும் சிலர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி