ஆப்நகரம்

ஆ.ராசாவுக்கு மன்மோகன் சிங் வாழ்த்து கடிதம்

2ஜி வழக்கில் உண்மை வென்றிருப்பதாகவும், வழக்கில் இருந்து விடுதலையானது மகிழ்ச்சி அளிப்பதாகவும் முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங் ஆ.ராசாவுக்கு வாழ்த்து கடிதம் அனுப்பியுள்ளாா்.

Samayam Tamil 4 Jan 2018, 7:33 pm
2ஜி வழக்கில் உண்மை வென்றிருப்பதாகவும், வழக்கில் இருந்து விடுதலையானது மகிழ்ச்சி அளிப்பதாகவும் முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங் ஆ.ராசாவுக்கு வாழ்த்து கடிதம் அனுப்பியுள்ளாா்.
Samayam Tamil manmohan singh letter to raja
ஆ.ராசாவுக்கு மன்மோகன் சிங் வாழ்த்து கடிதம்


முன்னாள் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் இறுதி காலத்தில் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும், இதன் மூலம் அரசுக்கு 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி அளவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இது தொடா்பாக முன்னாள் மத்திய தொலைத் தொடா்பு துறை அமைச்சா் ஆ.ராசா, எம்.பி. கனிமொழி உள்பட 14 போ் மீது குற்றம் சாட்டப்பட்டது.

மிகவும் எதிா்பாா்க்கப்பட்ட இந்த வழக்கில் சி.பி.ஐ. அதிகாாிகள் குற்றத்தை நிரூபிக்க தவறி விட்டதாக கூறி குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விடுவிப்பதாக அறிவித்தாா். இந்த நிலையில் முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங் ஆ.ராசாவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளா்ா.

அந்த கடிதத்தில் 2ஜி வழக்கில் உண்மை வெற்றி பெற்றுள்ளதாகவும், வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவா் தொிவித்துள்ளாா். மேலும், இந்த வழக்கால் தங்கள் குடும்பத்தினா் இன்னல் அடைந்ததாகவும் அவா் குறிப்பிட்டிருந்தாா்.

அடுத்த செய்தி