ஆப்நகரம்

கமல்ஹாசனை நடமாட விடமாட்டோம் - மன்னார்குடி ஜீயர் எச்சரிக்கை

ஸ்ரீரங்கம்: அரவக்குறிச்சி தொகுதியில் தேர்தல் பரப்புரையில் இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று பேசிய கமல்ஹாசனின் கருத்து தொடர்பாக மன்னார்குடி ஜீயர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Samayam Tamil 15 May 2019, 4:51 pm
இந்து மதத்திற்கு எதிராக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பேசி வருவதாகவும், அவரை நடமாட விடமால் செய்வோம் என மன்னார்குடி ஜீயர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Samayam Tamil மன்னார்குடி ஜீயர் கமல்ஹாசனுக்கு எச்சரிக்கை
மன்னார்குடி ஜீயர் கமல்ஹாசனுக்கு எச்சரிக்கை


அரவக்குறிச்சி தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையின் போது பேசிய கமல்ஹாசன், இந்தியாவின் முதல் தீவிரவாதி என்றும் அவர் பெயர் நாதுராம் கோட்சே என்று தெரிவித்தார்.

இந்த பேச்சு பெரிய சர்ச்சை ஆனது. பாஜக தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் உள்ளிட்ட பல்வேறு பல கட்சிகள் கண்டனம் தொிவித்து வருகின்றன. கமல்ஹாசன் மீது தொடரப்பட்ட வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.

இந்த விவகாரம் தொடர்பாக மன்னார்குடி செண்பக மன்னார் ஜீயர் திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள அவரது மடத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கமல்ஹாசன், ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் லஞ்சம் பெற்று கொண்டு, இந்து மதத்திற்கு விரோதமாக பேசி வருவதாக குற்றஞ்சாட்டினார்.

மேலும் பேசிய அவர், இந்து அமைப்புக்கள் இணைந்து கமல் ஹாசனை வெளியே நடமாட விடமாட்டோம் எனவும் அவர் எச்சரித்தார். இதற்கிடையில் கமல் ஹாசனின் கருத்து தொடர்பாக பேசிய பிரதமர் மோடி, உலகமே ஒரு குடும்பம் என்பதே இந்து தர்மத்தின் ஆழமான நம்பிக்கை. ஒருவர் இந்துவாக இருந்தால் அவர் நிச்சயம் தீவிரவாதியாக இருக்க முடியாது. அப்படி ஒரு தீவிரவாதி இருந்தால் அவர் நிச்சயம் இந்துவாக இருக்க முடியாது என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி