ஆப்நகரம்

சென்னை வந்தடைந்தார் மனோகர் பாரிக்கர்

சென்னை தாம்பரத்திலிருந்து சென்ற ராணுவ விமானம் மாயமான சம்பவம் குறித்து ஆய்வு நடத்துவதற்காக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் சென்னை வந்தடைந்தார்.

TNN 23 Jul 2016, 12:26 pm
சென்னை தாம்பரத்திலிருந்து சென்ற ராணுவ விமானம் மாயமான சம்பவம் குறித்து ஆய்வு நடத்துவதற்காக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் சென்னை வந்தடைந்தார்.
Samayam Tamil manohar parrikar arrives chennai for missing iaf plane
சென்னை வந்தடைந்தார் மனோகர் பாரிக்கர்


சென்னை தாம்பரம் விமானப்படை தளத்திலிருந்து ஏ.என்-32 ரக சரக்கு விமானம்,நேற்று முன் தினம் அந்தமான் தலைநகர் போர்ட் பிளேயருக்கு கிளம்பிச்சென்றது.இரண்டு விமானிகள் உட்பட 22 பேர் அந்த விமானத்தில் பயணம் செய்தனர்.தாம்பரத்திலிருந்து கிளம்பிய 15 நிமிடத்தில் கட்டுப்பாட்டு அறையின் தொடர்பிலிருந்து துண்டிக்கப்பட்ட விமானம் ,ரேடார் கண்காணிப்பில் இருந்தும் காணாமல் போனது.இதனை தொடர்ந்து காணாமல் போன விமானத்தை தேடும் பணி கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வருகிறது.


இந்நிலையில் தேடுதல் பணி குறித்து ஆய்வு செய்வதற்காக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் இன்று காலை சென்னை வந்தடைந்தார்.சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,பருவ நிலை மாறுதல் காரணமாக விமானத்தை தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது எனவும்,இதுவரை விமானம் குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை எனவும் தெரிவித்தார்.இதனை தொடர்ந்து தாம்பரத்தில் உள்ள இந்திய விமான படைத்தளத்திற்கு புறப்பட்டு சென்ற மனோகர் பாரிக்கர்,விமான தேடுதல் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.பின்னர் விமானம் மூலம் தேடுதல் பணி நடைபெறும் இடங்களில் ஆய்வு மேற்கொண்டார்.

அடுத்த செய்தி