ஆப்நகரம்

அதிமுக அமைச்சர்கள் மீது இத்தனை ஊழல் புகார்களா? ஆதாரம் திரட்டிய ஸ்டாலின்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் மாளிகைக்கு நேரடியாக சென்று பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்தார்.

Samayam Tamil 22 Dec 2020, 12:34 pm
அதிமுக அரசு மீதான பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை புகார்களாக மு.க.ஸ்டாலின் ஆளுநரிடம் வழங்கியுள்ளார்.
Samayam Tamil mk stalin planisamy


முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் பல்வேறு அமைச்சர்கள் மீது பல்வேறு ஊழல் குற்றச் சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா, ஆர்.எஸ்.பாரதி. டிகேஎஸ் இளங்கோவன் உள்ளிட்ட நிர்வாகிகள் ராஜ் பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்தனர்.

ரஜினி மீது பாயும் மக்கள் சேவை இயக்கம்: வழக்கு தொடுக்க தீவிரம்!

அதிமுக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளவர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுக்களை 97 பக்க புகார்களாக திமுக நிர்வாகிகள் ஆளுநரிடம் வழங்கினர்.



இது தொடர்பாக திமுக வெளியிட்ட செய்திக் குறிப்பில், “முதலமைச்சர் திரு பழனிச்சாமி மீது தனது நெருங்கிய உறவினர்களுக்கு 6133.57 கோடி ரூபாய் மதிப்பிலான 6 நெடுஞ்சாலைத்துறை டெண்டர்களை கொடுத்தது; கொரோனா பேரிடர் காலத்தில் மத்திய அரசு கூடுதலாக வழங்கிய இலவச அரிசியை வெளி மார்க்கெட்டில் விற்று முறைகேடாக பணம் சம்பாதித்து அரசுக்கு 450 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியது; முதற்கட்டமாக 200.21 கோடி ரூபாய் வருமானத்திற்கு அதிகமாக தனது உறவினர்கள் மற்றும் பினாமிகள் பெயரில் 19 சொத்துக்களை வாங்கி குவித்தது குறித்து ஊழல் புகார்.

துணை முதலமைச்சர் திரு ஓ. பன்னீர்செல்வம் மீது “காக்னிஷன்ட்” கம்பெனி கட்டுமான அனுமதி ஊழல் உள்ளிட்ட வருமானத்திற்கு அதிகமாக சொத்துக் குவித்த ஊழல் புகார்.

உள்ளாட்சி துறை அமைச்சர் திரு எஸ்.பி. வேலுமணி மீது 9 பினாமி கம்பெனிகளை வைத்து- அதிக விலைக்கு கிராம ஊராட்சி மன்றங்களுக்கு எல்.இ.டி விளக்கு கொள்முதல் செய்து 875 கோடி ஊழல் புகார்.

தள்ளிப்போன பள்ளிகள் திறப்பு: 2020 -கற்றதும் பெற்றதும் என்ன?

மின்வாரியத்துறை அமைச்சர் திரு பி. தங்கமணி மீது நிலக்கரி இறக்குமதி , தரமற்ற நிலக்கரி வாங்கியது, போலி மின்சாரக் கணக்கில் ஊழல் உள்ளிட்ட 950.26 கோடி ரூபாய் ஊழல் புகார்.

உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ஆர்.காமராஜ் கொரோனா பேரிடர் காலத்தில் மத்திய அரசு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கிய இலவச அரசி மற்றும் வாங்கிய அரசியை வெளிமார்க்கெட்டில் விற்று முறைகேடாக பணம் சம்பாதித்தது குறித்த ஊழல் புகார்.

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் திரு சி.விஜயபாஸ்கர் மீது அரசு அதிகாரிகள் மாறுதல்கள் மற்றும் நியமனங்களுக்கா 20.75 கோடி ரூபாய் லஞ்சம் பெற்று வைத்திருந்த கவர்கள் வருமான வரித்துறையால் கைப்பற்றப்பட்டது; புதுக்கோட்டையில் கல் குவாரியில் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு அதிகமாக கல் வெட்டியெடுத்து அரசுக்கு இழப்பு ஏற்படுத்தி ஊழல் செய்தது உள்ளிட்ட ஊழல் புகார்கள்.

முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன்?: தளபதி 65 க...
வருவாய் மற்றும் பேரிடர் துறை அமைச்சர் திரு ஆர்.பி. உதயகுமார் மீது 1950 கோடி ரூபாய் பாரத் நெட் டெண்டர் ஊழல் புகார். மீன்வளத்துறை அமைச்சர் திரு டி.ஜெயக்குமார் மீது மீனவர்களுக்கு வாக்கி டாக்கி கொள்முதல் செய்ததில் 30 கோடி ரூபாய் ஊழல்.

முதற்கட்டமாக முதலமைச்சர் திரு பழனிச்சாமி மீதான வருமானத்திற்கு மீறிய சொத்துக் குவிப்பு வழக்கு உள்ளிட்ட எட்டு அமைச்சர்கள் மீது தற்போது ஊழல் புகார் பட்டியல் மாண்புமிகு தமிழக ஆளுநர் அவர்களிடம் கொடுத்து- 2018 ஆம் ஆண்டு ஊழல் தடுப்புச் சட்டப்படி நடவடிக்கை எடுத்து - மாநிலத்தில் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டிடுமாறு வலியுறுத்தியிருப்பட்டிருக்கிறது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி