ஆப்நகரம்

Tamil Nadu Weather: தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு வெளுத்து வாங்கும் மழை - எந்தெந்த பகுதியில் தெரியுமா!

ஃபானி புயல் எதிரொலியாக அடுத்த 2 நாட்களுக்கு நல்ல மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 29 Apr 2019, 9:04 pm
தென்கிழக்கு வங்கக்கடலில் ஃபானி புயல் உருவாகியுள்ளது. இது சென்னைக்கு தென்கிழக்கே மையம் கொண்டுள்ளது. ஃபானி புயல் நாளை அதி தீவிர புயலாக மாறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil TN Weather Map


இதையடுத்து வடமேற்கு நோக்கி நகர்ந்து, மே ஒன்றாம் தேதி வடகிழக்கு திசை நோக்கி பயணிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புயல் தமிழகம் மற்றும் ஆந்திராவில் கரையைக் கடக்காது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

மேலும் ஒடிசாவில் கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. இந்தப் புயல் காரணமாக கேரளாவின் பல்வேறு பகுதிகளில் நல்ல மழை பெய்யக்கூடும்.

மேலும் கேரளாவை ஒட்டிய தமிழகப் பகுதிகள், தென் தமிழகத்தில் விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் கனமழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும்.

மத்திய மற்றும் தெற்கு கேரளா, தென் தமிழகத்தில் அதிக மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அனைவரும் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி