ஆப்நகரம்

கோவை சிறையில் மாவோயிஸ்டுகள் உண்ணாவிரதம்

கோவை சிறையில் உள்ள மாவோயிஸ்டுகள் இருவர் திடீரென உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.

TNN 20 Jun 2017, 3:14 am
கோவை சிறையில் உள்ள மாவோயிஸ்டுகள் இருவர் திடீரென உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.
Samayam Tamil maoists observe fast in coimbatore prison
கோவை சிறையில் மாவோயிஸ்டுகள் உண்ணாவிரதம்


கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ள அனூப் மற்றும் வீரமணி என்ற இரு மாவோயிஸ்ட் குற்றவாளிகள் ஞாயிற்றுக்கிழமையன்று திடீர் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினர்.

கடந்த வாரம் சிறையில் உள்ள மாவோயிஸ்டுகளை பார்க்க வந்த இருவர் மீது பொய் வழக்கு போட்டு கைது செய்துவிட்டதாகக் கூறி அவர்கள் இந்த உண்ணாவிரதத்தை மேற்கொண்டுள்ளனர். அவர்களைச் சந்திக்க வந்த இருவரும் ரஷீத் மற்றும் ஹரி ஷர்மா என்றும் அவர்கள் மாவோயிஸ்டு ஆதரவாளர்கள் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உண்ணாவிரதம் இருக்கும் இருவரும் கடந்த 12ஆம் தேதி கேரளாவில் உள்ள சிறையில் மாவோஸ்டு கைதிகளிடம் பென் ட்ரைவ்களை கொடுக்க முயன்றபோது பிடிபட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டனர்.

அடுத்த செய்தி