ஆப்நகரம்

திமுக தலைவர் கருணாநிதியின் ஊரில் மரகத லிங்கம் திருட்டு..!

திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்த ஊரான திருக்குவளையில் 1000 ஆண்டுகள் பழமையான மரகத லிங்கத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

TNN 10 Oct 2016, 5:24 pm
திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்த ஊரான திருக்குவளையில் 1000 ஆண்டுகள் பழமையான மரகத லிங்கத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
Samayam Tamil marakatha lingam stolen from thirukuvalai pirammapureeswarar temple
திமுக தலைவர் கருணாநிதியின் ஊரில் மரகத லிங்கம் திருட்டு..!


திமுக தலைவரும்,முன்னாள் தமிழக முதல்வருமான கருணாநிதி பிறந்த ஊரான நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளையில்,3000 ஆண்டுகள் பழமையான பிரம்மபுரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த மரகத லிங்கம் உள்ளது.

இந்த மரகத லிங்கத்தை பஞ்ச பாண்டவர்கள் வணங்கியதாக கூறப்படுவதால்,சுற்றுவட்டாரத்தில் இந்த மரகத லிங்கம் பிரசித்தி பெற்றிருந்தது.இந்நிலையில் நேற்று மாலை இந்த கோவிலின் அர்ச்சகர் கோவிலை திறந்த போது மரகதலிங்கம் காணாமல் போயிருப்பது தெரியவந்தது.இதனால் அதிர்ச்சி அடைந்த கோவில் நிர்வாகம், இந்த திருட்டு குறித்து காவல்துறையில் புகார் அளித்துள்ளது.

இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் தனிப்படை அமைத்து மரகத லிங்கத்தை திருடியவர்களை தேடி வருகின்றனர்.

English Summary:

Marakatha Lingam stolen from thirukuvalai pirammapureeswarar temple

அடுத்த செய்தி