டெல்லி: ஏர்செல் - மேக்சிஸ் பண பரிவர்த்தனை தொடர்பான வழக்கில் மாறன் சகோதர்கள் மற்றும் காவேரி கலாநிதி மாறன் ஆகியோர் தாக்கல் செய்திருந்த முன்ஜாமீன் மனு மீதான விசாரணையை ஆகஸ்ட் 1ம் தேதிக்கு ஒத்திவைத்து டெல்லி சிபிஐ நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
ஏர்செல்-மேக்சிஸ் சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்க துறை சார்பில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், தயாநிதி மாறன், சன் குழுமத்தலைவர் கலாநிதி மாறன் உட்பட 6 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதில் சட்டவிரோத பணபரிவத்தனை நடைபெற்றதாகவும், இது அந்நிய செலாவணி சட்டத்திற்கு எதிரானது என்றும் குற்றம்சாட்டப்பட்டு இருந்தது.
இந்த முறைகேடு தொடர்பாக நேரில் ஆஜராகுமாறு மாறன் சகோதரர்களுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பி இருந்தது. அதன் அடிப்படையில், கடந்த 11ம் தேதி மாறன் சகோதரர்களான தயாநிதி மாறன், கலாநிதி மாறன் மற்றும் அவரது மனைவி காவேரி ஆகியோர் டெல்லியில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜராகினர். வழக்கறிஞர் காலஅவகாசம் கோரியதையடுத்து விசாரணையை ஜூலை 21ம் தேதிக்கு சிபிஐ நீதிமன்றம் ஒத்தி வைத்தது.
இதையடுத்து, அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி மாறன் சகோதோரர்கள், அவரது மனைவி காவேரி கலாநிதி ஆகியோர் சிபிஐ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். கலாநிதி மாறன், தயாநிதி மாறன், காவேரி கலாநிதி முன் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு மீது நீதிபதி ஓ.பி.சைனி முன்னிலையில் விசாரணை இன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
இதனிடையே டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் இன்று தயாநிதிமாறன், சன் குழுமத்தலைவர் கலாநிதி மாறன், அவரது மனைவி காவேரி கலாநிதி மாறன் ஆகியோர் இன்று ஆஜராகினர். முன் ஜாமீன் மனு மீதான விசாரணையை ஆகஸ்ட் 1ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி ஓ.பி சைனி உத்தரவிட்டார்.
ஏர்செல்-மேக்சிஸ் சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்க துறை சார்பில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், தயாநிதி மாறன், சன் குழுமத்தலைவர் கலாநிதி மாறன் உட்பட 6 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதில் சட்டவிரோத பணபரிவத்தனை நடைபெற்றதாகவும், இது அந்நிய செலாவணி சட்டத்திற்கு எதிரானது என்றும் குற்றம்சாட்டப்பட்டு இருந்தது.
இந்த முறைகேடு தொடர்பாக நேரில் ஆஜராகுமாறு மாறன் சகோதரர்களுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பி இருந்தது. அதன் அடிப்படையில், கடந்த 11ம் தேதி மாறன் சகோதரர்களான தயாநிதி மாறன், கலாநிதி மாறன் மற்றும் அவரது மனைவி காவேரி ஆகியோர் டெல்லியில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜராகினர். வழக்கறிஞர் காலஅவகாசம் கோரியதையடுத்து விசாரணையை ஜூலை 21ம் தேதிக்கு சிபிஐ நீதிமன்றம் ஒத்தி வைத்தது.
இதையடுத்து, அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி மாறன் சகோதோரர்கள், அவரது மனைவி காவேரி கலாநிதி ஆகியோர் சிபிஐ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். கலாநிதி மாறன், தயாநிதி மாறன், காவேரி கலாநிதி முன் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு மீது நீதிபதி ஓ.பி.சைனி முன்னிலையில் விசாரணை இன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
இதனிடையே டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் இன்று தயாநிதிமாறன், சன் குழுமத்தலைவர் கலாநிதி மாறன், அவரது மனைவி காவேரி கலாநிதி மாறன் ஆகியோர் இன்று ஆஜராகினர். முன் ஜாமீன் மனு மீதான விசாரணையை ஆகஸ்ட் 1ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி ஓ.பி சைனி உத்தரவிட்டார்.