ஆப்நகரம்

மெரினா வன்முறை : டிஜிபி, காவல் ஆணையருடன் முதல்வர் ஓபிஎஸ் ஆலோசனை

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது மெரினாவில் நடைபெற்ற வன்முறை தொடர்பாக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் , டிஜிபி மற்றும் காவல் ஆணையருடன் இன்று ஆலோசனை நடத்தினார்.

TNN 28 Jan 2017, 12:34 pm
சென்னை : ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது மெரினாவில் நடைபெற்ற வன்முறை தொடர்பாக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் , டிஜிபி மற்றும் காவல் ஆணையருடன் இன்று ஆலோசனை நடத்தினார்.
Samayam Tamil marina voilence tn cm ops discuss with dgp and commissnor
மெரினா வன்முறை : டிஜிபி, காவல் ஆணையருடன் முதல்வர் ஓபிஎஸ் ஆலோசனை


ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் அறவழிப்போராட்டம் நடைப்பெற்றது. இந்த போராட்டத்தின் கடைசி நாளான ஜனவரி 23-ம் தேதி சென்னை மெரினாவில் வன்முறை வெடித்தது. கல்வீச்சு , தீ வைப்பு என சென்னையே பரபரப்பாக மாறியது. இந்த போராட்டத்தின் போது வன்முறையில் ஈடுப்பட்டதாக கூறி 200-க்கு மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

இந்தநிலையில் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது மெரினாவில் நடைபெற்ற வன்முறை தொடர்பாக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் , டிஜிபி மற்றும் காவல் ஆணையருடன் இன்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின் போது, வன்முறையின் போது போலீசார் எடுத்த நடவடிக்கை தொடர்பாக முதல்வர் கேட்டறிந்தார்.

மேலும் போலீசார் வன்முறையில் ஈடுப்பட்டதாக கூறப்படும் புகார் பற்றியும் டிஜிபி மற்றும் காவல் ஆணையருரிடம் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கேட்டறிந்தாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அடுத்த செய்தி