ஆப்நகரம்

படித்த அரசுப் பள்ளிக்கு தங்கமகன் மாரியப்பன் நிதியுதவி

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டிகள் நடந்து வருகிறது. இதில் நீளம் தாண்டும் போட்டியில் பங்கேற்ற மரியப்பன் தங்கவேலு தங்க பத்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

TNN 11 Sep 2016, 9:29 pm
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டிகள் நடந்து வருகிறது. இதில் நீளம் தாண்டும் போட்டியில் பங்கேற்ற மரியப்பன் தங்கவேலு தங்க பத்கம் வென்று சாதனை படைத்துள்ளார். அவருக்கு தமிழக அரசு ரூ. 2 கோடியும், மத்திய விளையாட்டு அமைச்சகம் ரூ. 75 லட்சம் பரிசாக அறிவித்துள்ளன.
Samayam Tamil mariyappan thangavelu who helping to his school
படித்த அரசுப் பள்ளிக்கு தங்கமகன் மாரியப்பன் நிதியுதவி


இந்நிலையில் சேலம் மாவட்டம் பெரியவடகம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்தவர். அப்பள்ளியில் அவருக்கு பயிற்சி அளித்த உடற்பயிற்சி ஆசிரியர் கூறுகையில்: மாரியப்பன் வரும் 22ம் தேதி ஊர் திரும்புகிறார். அவருக்கு சிறப்பான ஏற்பாடுகள் செய்ய முடிவு செய்துள்ளோம். மாரியப்பனுக்கு மத்திய, மாநில அரசுகள் பரிசுகள் அறிவித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்று கூறியுள்ளார். இது தொடர்பாக மாரியப்பனிடம் பேசினோம், அவர் கூறுகையில், நான் படித்த அரசு பள்ளிக்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை பள்ளியின் வளர்ச்சிக்கு அளிக்க முடிவு செய்துள்ளார்.

பள்ளியின் தரத்தை உயர்த்தவும், விளையாட்டு மைதானத்தை மேம்படுத்தவும் இந்த இந்த அரசு பரிசுத் தொகை செலவிடப்படும் என்று கூறியுள்ளார். மேலும், மாரியப்பனின் தாய் சரோஜா கூறுகையில், நாங்கள் மிகவும் சிறிய வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். எனவே, மாரியப்பனுக்கு கிடைத்துள்ள பரிசுத் தொகையை வைத்து சொந்தமாக வீடு ஒன்றை கட்ட முடிவு செய்துள்ளோம் என்று கூறியுள்ளார்.

அடுத்த செய்தி