ஆப்நகரம்

எலும்பு மஜ்ஜை தானம் செய்த முதல் பெண் இவர்தான்!

எலும்பு மஜ்ஜை தானம் செய்த முதல் பெண் என்ற பெருமையை கோவை சேர்ந்த மாலிலாமணி பெற்றுள்ளர். இவரின் உதவியால் ஒரு பெண் குழந்தை பிழைத்துள்ளது.

Samayam Tamil 12 Mar 2019, 5:29 pm
எலும்பு மஜ்ஜை தானம் செய்த முதல் பெண் என்ற பெருமையை கோவை சேர்ந்த மாலிலாமணி பெற்றுள்ளர். இவரின் உதவியால் ஒரு பெண் குழந்தை பிழைத்துள்ளது.
Samayam Tamil bone-marrow_d


கோவையை சேர்ந்தவர் மாசிலாமணி. இவருக்கு 20 வயதிலே கவியரசன் என்பருடன் திருமணமாகி பெண்குழந்தை உள்ளது. இவர்களது பெண் குழந்தை அறியவகை நோயான தாலசீமியா பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த குழந்தைக்கு குறிப்பிட்ட காலயிடவேளைக்குள் ரத்த மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்.

குழந்தைக்கு ஸ்டெம்செல் சிகிச்சை செய்வதற்காக, குழந்தையின் ரத்த விவரங்கள், மாசிலாமணி மற்றும் கணவரின் ரத்த விரங்களை தாத்ரி ( தேசிய அளவில் ஸ்டெம் வழங்கியவர்கலின் வரங்களை பதிவு செய்யும் அமைப்பு ) என்ற அரசுசாரா அமைப்பில் பதிவு செய்தார்.

இந்நிலையில் டெல்லியை சேர்ந்த மூன்று மாதங்களேயான குழந்தை நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு கரணமாக நோய் வாய்ப்பட்டுள்ளது. இந்த குழந்தை உயிர் பிழைக்க வேண்டும் என்றால் உடனடியாக எலும்பு மஜ்ஜை செலுத்த வேண்டும் என்ற மருத்துவர்கள் கூறினர். இதைத்தொடர்ந்து தாத்ரி அமைப்பில் மாசிலாமணியின் விவரங்களை பார்த்த இந்த குழந்தையின் தாய் அவரை தொடர்பு கொண்டு உதவு மாறு கேட்டுள்ளர். இந்நிலையில் மாசிலாமணியின் கணவரின் குடும்பத்தார், மாசிலாமணி எலும்பு மஜ்ஜை கொடுக்க வேண்டாம் என்று முதலில் மறுத்தனர் . ஆனால் அவர்களை சமாதானம் செய்த மாசிலாமணி எலும்பு மஜ்ஜை வழங்கினார்.

இதைத்தொடர்ந்து பேசிய அவர் . எனக்கு தற்போது இரண்டு குழந்தைகள் உள்ளனர். அந்த குழந்தைக்கு நான் உயிர் கொடுத்திருக்கிறேன் என்பதால் நானும் அதற்கு குழதைக்கு தாய்தான் என்று கூறினார்’’.

அடுத்த செய்தி