ஆப்நகரம்

வைகை ஆற்றை தூய்மைப்படுத்தும் பணியில் 25,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு!

சுமார் 44 கிமீ தொலைவுக்கு வைகை ஆற்றை 25,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்வமாக சுத்தம் செய்து வருகின்றனர் .

Samayam Tamil 20 Dec 2018, 3:20 pm
தூய்மை பாரத இயக்கம் சார்பில் மதுரை வைகை ஆற்றை 25,000 க்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரி மாணவர்கள் சுத்தம் செய்தனர்.
Samayam Tamil vaigai mass cleaning


மதுரையில் தூய்மை பாரத இயக்கம் சார்பில் வைகை ஆற்றை சுத்தப்படுத்தும் பணி துவங்கியது. மாவட்ட ஆட்சியர் நடராஜன், மாநகர காவல்துறை ஆணையாளர் டேவிட்சன் தேவா ஆசீர்வாதம் உள்ளிட்டோர் பணியை துவக்கி வைத்தனர். பள்ளி, கல்லூரி மாணவர்களை கொண்டு வைகையை சுத்தம் செய்யும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.

சுமார் 44 கிமீ தொலைவுக்கு வைகை ஆற்றை படிப்படியாக சுத்தம் செய்து வருகின்றனர். அந்தந்த பகுதிகளில் வைகை ஆற்றை ஒட்டியுள்ள பகுதிகளில் உள்ள மாணவர்கள் தூய்மை பணியை ஆர்வமாக செய்து வருகின்றனர். ஆற்றில், ஆற்றங்கரையில் இருக்கும் குப்பைகளை மாணவர்கள் ஒன்று சேர்ந்து எடுத்து பைகளில் போட்டு அகற்றி வருகின்றனர். மேலும், மாநகராட்சி பணியாளர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட மற்ற அமைப்புகளும் மாணவர்களோடு சேர்ந்து வைகை ஆற்றை தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அடுத்த செய்தி