ஆப்நகரம்

மாணவர்கள் போராட்டம் மிகப்பெரிய வெற்றி : ராகவா லாரன்ஸ்

மாணவர்கள் போராட்டம் மிகப்பெரிய வெற்றியை அடைந்திருக்கிறது. ஜல்லிக்கட்டு போராட்ட வெற்றிக்கு முதல்வரை சந்தித்து நன்றி தெரிவித்துக் கொண்டோம் என்று ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

TNN 29 Jan 2017, 3:24 pm
மாணவர்கள் போராட்டம் மிகப்பெரிய வெற்றியை அடைந்திருக்கிறது. ஜல்லிக்கட்டு போராட்ட வெற்றிக்கு முதல்வரை சந்தித்து நன்றி தெரிவித்துக் கொண்டோம் என்று ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil mass victory for student protest lawerence
மாணவர்கள் போராட்டம் மிகப்பெரிய வெற்றி : ராகவா லாரன்ஸ்


மாணவர்கள் அமைப்பு மற்றும் இளைஞர்களுடன் முதல்வர் பன்னீர் செல்வத்தை நடிகர் ராகவா லாரன்ஸ் மற்றும் இயக்குனர் கவுதமன் சந்தித்தனர். இதையடுத்து பேட்டியளித்த லாரன்ஸ், '' மாணவர்கள் போராட்டம் மிகப்பெரிய வெற்றியை அடைந்திருக்கிறது. ஜல்லிக்கட்டு போராட்ட வெற்றிக்கு முதல்வருக்கு நன்றி தெரிவித்தோம்.

வன்முறையை தூண்டும்விதமாக செயல்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். வன்முறையில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். மாணவர்கள், இளைஞர்கள் காவல் நிலையத்தில் இருந்த வாகங்களை எரிக்கவில்லை. எங்களுடைய கோரிக்கை ஜல்லிகட்டுக்காக மட்டுமே,ஆனால் தமிழர் பிரச்சனைக்கும் சேர்த்து சிலர் போராடினர்கள்" என்று அவர் தெரிவித்தார்.

அடுத்த செய்தி