ஆப்நகரம்

தாமிரபரணியை காக்க நெல்லையில் உண்ணாவிரதம் துவங்கியது #SaveThamirabarani

தாமிரபரணி நதியை காக்க காவல்துறைநெல்லையில் இன்று மாபெரும் உண்ணாவிரப் போராட்டத்தை இளைஞர்கள் , பொதுமக்கள் முன்னெடுத்து வருகின்றனர்.

TNN 6 Mar 2017, 2:04 pm
நெல்லை : தாமிரபரணி நதியை காக்க நெல்லையில் இன்று மாபெரும் உண்ணாவிரப் போராட்டத்தை இளைஞர்கள் , பொதுமக்கள் முன்னெடுத்து வருகின்றனர்.
Samayam Tamil massive hunger strike held in nellai for savethamirabarani
தாமிரபரணியை காக்க நெல்லையில் உண்ணாவிரதம் துவங்கியது #SaveThamirabarani


தாமிரபரணி நதியை காக்க நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையிலுள்ள ஜவஹர் திடலில் இன்று காலை 9 மணியளவில் மாபெரும் உண்ணாவிரப் போராட்டம் துவங்கியுள்ளது .இந்த போராட்டத்தில் இளைஞர்கள், பெண்கள் மற்றும் பொது மக்கள் அதிகளவில் பங்கெடுத்து வருகின்றனர்.

திருநெல்வேலி , தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்ட மக்களின் குடிநீர் தேவையையும், விவாசாய தேவைக்கான நீரையும் தாமிரபரணி ஆறு வழங்கிவருகிறது. தாமிரபரணி ஆற்றில் இருந்து 37 தொழிற்சாலைகள் மிகவும் சொற்பமான விலையில் நாளொன்றுக்கு பல லட்சம் லிட்டர் தண்ணீரை உறிஞ்சி வருகின்றனர்.

குளிர்பான நிறுவனங்கள் மற்றும் ஏனைய பெரிய தொழிற்சாலைகள் அதிகளவில் நீர் எடுப்பதால் தாமிரபரணி நதியானது வற்றி வருகிறது என்று பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இதனிடையே தாமிரபரணி ஆற்றில் இருந்து தொழிற்சாலை தண்ணீர் எடுக்க ஏதிர்ப்பு தெரிவித்து கங்கைகொண்டான் அருகேயுள்ள துறையூர் கிராமத்தில் கால்நடை மருத்துவமனை அருகில் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் நேற்று நள்ளிரவிலும் போராட்டத்தில் ஈடுப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


massive hunger strike held in nellai for savethamirabarani

அடுத்த செய்தி