ஆப்நகரம்

நெல்லையில் நாளை மாபெரும் உண்ணாவிரத போராட்டம் #SaveThamirabarani

தாமிரபரணி நதியை காக்க காவல்துறை அனுமதியுடன் நாளை( ஞாயிற்றுகிழமை) மாபெரும் உண்ணாவிரப் போராட்டம் நெலையில் நடைபெற உள்ளது.

TNN 4 Mar 2017, 8:28 pm
நெல்லை : தாமிரபரணி நதியை காக்க காவல்துறை அனுமதியுடன் நாளை( ஞாயிற்றுகிழமை) மாபெரும் உண்ணாவிரப் போராட்டம் நெலையில் நடைபெற உள்ளது.
Samayam Tamil massive hunger strike will held tomorrow in nellai for savethamirabarani
நெல்லையில் நாளை மாபெரும் உண்ணாவிரத போராட்டம் #SaveThamirabarani


தாமிரபரணி நதியை காக்க நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையிலுள்ள ஜவஹர் திடலில் நாளை காலை 9 மணியளிவில் மாபெரும் போராட்டம் நடைபெற உள்ளது .இந்த போராட்டத்தில் இளைஞர்கள், இளம் பெண்கள் மற்றும் பொது மக்கள் அதிக அளவில் திரள வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இந்த மாபெரும் உண்ணவிரத போராட்டத்திற்கு காவல் துறை அனுமதி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

திருநெல்வேலி , தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்ட மக்களின் குடிநீர் தேவையையும், விவாசாய தேவைக்கான நீரையும் தாமிரபரணி ஆறு வழங்கிவருகிறது. தாமிரபரணி ஆற்றில் இருந்து 37 தொழிற்சாலைகள் மிகவும் சொற்பமான விலையில் நாளொன்றுக்கு பல லட்சம் லிட்டர் தண்ணீரை உறிஞ்சி வருகின்றனர்.

குளிர்பான நிறுவனங்கள் மற்றும் ஏனைய பெரிய தொழிற்சாலைகள் அதிகளவில் நீர் எடுப்பதால் தாமிரபரணி நதியானது வற்றி வருகிறது என்று பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இதனிடையே தாமிரபரணி ஆற்றில் இருந்து தொழிற்சாலை தண்ணீர் எடுக்க ஏதிர்ப்பு தெரிவித்து கங்கைகொண்டான் அருகேயுள்ள துறையூர் கிராமத்தில் கால்நடை மருத்துவமனை அருகில் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் இரவிலும் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.


massive hunger strike will held tomorrow in nellai for save thamirabarani

அடுத்த செய்தி