ஆப்நகரம்

ராமநாதபுரத்தில் காட்டுத் தீ

ராமநாதபுரம் மாவட்டத்தில் பல மணிநேரம் பற்றி எரிந்த காட்டுத் தீயில் பல ஆயிரக்கணக்கான மரங்கள் எரிந்து, சாம்பலாகின.

TNN 4 Jul 2016, 10:50 pm
ராமநாதபுரம் மாவட்டத்தில் பல மணிநேரம் பற்றி எரிந்த காட்டுத் தீயில் பல ஆயிரக்கணக்கான மரங்கள் எரிந்து, சாம்பலாகின.
Samayam Tamil massive wildfire in ramanathapuram
ராமநாதபுரத்தில் காட்டுத் தீ


அங்குள்ள வாலாந்தரவை போலையன் நகரில் எரிவாயு சேமிப்புக் கிடங்கு ஒன்று உள்ளது. இதையொட்டி, பல ஏக்கர் பரப்பளவில் பனை, தென்னை மரங்கள் உள்னள. இந்நிலையில், திடீரென ஏற்பட்ட காட்டுத் தீ, அங்கிருந்த பனை, தென்னை மரங்களில் பற்றி, பல மணிநேரமாக கொழுந்துவிட்டு எரிந்தது.

இதில், கிட்டத்தட்ட 50 ஏக்கரில் இருந்த 15,000க்கும் அதிகமான பனை மரங்கள், 300க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் முற்றிலும் எரிந்து சாம்பலாகின. இதையடுத்து, தீயணைப்புப் படையினர் வரவழைக்கப்பட்டு, கடும் போராட்டத்திற்குப் பின், காட்டுத் தீ அணைக்கப்பட்டது. சம்பவ இடத்தை ஆட்சியர் நாகராஜன், காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டனர்.

இதுபோன்ற காட்டுத் தீ சம்பவங்கள் அப்பகுதியில் அடிக்கடி நிகழ்வதாகவும், இதுகுறித்து போலீசார் உரிய விசாரணை நடத்த வேண்டும் எனவும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

அடுத்த செய்தி