ஆப்நகரம்

தமிழகம் வருகிறார் ஆளுநர்: ஓ.பி.எஸ். வீட்டில் மதுசூதனன் சந்திப்பு

ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று மாலையில் தமிழகம் வரும் நிலையில், அதிமுக மூத்த தலைவர் மதுசூதனன் ஓ.பன்னீர்செல்வத்தைச் சந்திக்க அவரது இல்லத்திற்குச் சென்றிருக்கிறார்.

TNN 9 Feb 2017, 1:40 pm
சென்னை: ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று மாலையில் தமிழகம் வரும் நிலையில், அதிமுக மூத்த தலைவர் மதுசூதனன் ஓ.பன்னீர்செல்வத்தைச் சந்திக்க அவரது இல்லத்திற்குச் சென்றிருக்கிறார்.
Samayam Tamil mathusoothanan meets o panneerselvam ahead of tamilnadu governers arrival
தமிழகம் வருகிறார் ஆளுநர்: ஓ.பி.எஸ். வீட்டில் மதுசூதனன் சந்திப்பு


அதிமுக பொதுசெயலாளர் வி.கே.சசிகலா அக்கட்சியின் சட்டப்பேரவைக்குழு தலைவராக தேர்வுசெய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து அவர் தமிழக முதல்வராக பதவியேற்க இருக்கிறார். ஆனால், ஆளுநர் வித்யாசாகர் ராவ் சென்னைக்கு வராததால் இருப்பதால் அவரது பதவியேற்பு நிகழ்வு கேள்விக்குறியாகியுள்ளது. இந்நிலையில், ஆளுநர் மும்பையிலிருந்து சென்னைக்குப் புறப்பட்டுள்ளார். மாலையில் அவர் சென்னை வருவார் என்று தகவல் கிடைத்துள்ளது.

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவுக்கு வலது கரமாக இருந்தவரும், சசிகலாவை முன் நிறுத்தியவருமான மதுசூதனன் நேற்று முன்தினம் மெரினாவில் பன்னீர்செல்வம் அளித்த அதிரடிப்பேட்டிக்குப் பின் அவருக்கு ஆதரவு தெரிவித்தார். மாலை ஆளுநர் தமிழகம் வரும் நிலையில் இவர்களிடையேயான சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

அடுத்த செய்தி