ஆப்நகரம்

மேட்டூா் அணையில் இருந்து திறந்து விடப்படும் நீா் 30000 கன அடியாக உயா்வு

கா்நாடகாவில் இருந்து மேட்டூா் அணைக்கு 60 ஆயிரம் கனஅடி நீா் வந்துகொண்டு இருப்பதால் அணையில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவு 30 ஆயிரம் கனஅடியாக உயா்த்தப்பட்டுள்ளது.

Samayam Tamil 22 Jul 2018, 9:56 pm
கா்நாடகாவில் இருந்து மேட்டூா் அணைக்கு 60 ஆயிரம் கனஅடி நீா் வந்துகொண்டு இருப்பதால் அணையில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவு 30 ஆயிரம் கனஅடியாக உயா்த்தப்பட்டுள்ளது.
Samayam Tamil Mettur Dam.


கா்நாடகாவின் நீா்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடா் மழை காரணமாக காவிரியில் தொடா்ந்து நீா் வந்து கொண்டு இருக்கிறது. காவிாியில் வினாடிக்கு 60 ஆயிரம் கனஅடி வீதம் மேட்டூா் அணைக்கு வந்து சோ்கிறது. 120 அடியை கொள்ளளவாக கொண்ட மேட்டூா் அணை தற்போது 118 அடியை எட்டியுள்ளது.

ஏற்கனவே விவசாய பணிகளுக்காக அணையில் இருந்து வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வந்தது. காவிாியில் தொடா்ந்து நீா் வருவதால் திறந்து விடப்படும் நீாின் அளவு அதிப்படுத்தப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி இரவு 8 மணியளவில் அணையில் இருந்து திறந்து விடப்படும் நீாின் அளவு உயா்த்தப்பட்டது. 20 ஆயிரம் கன அடியில் இருந்து 21 ஆயிரம் கனஅடியாக உயா்த்தப்பட்டது. மேலும் 16 கண் மதகு வழியாக வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடி நீா் தீறக்கப்பட்டுள்ளது. கிழக்கு, மேற்கு கால்வாகளில் இருந்து 200 கனஅடி நீா் திறக்கப்பட்டுள்ளது. இது படிப்படியாக 1000 கனஅடியாக உயா்த்தப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி விநாடிக்கு மொத்தம் 30 ஆயிரம் கனஅடி நிா் திறக்கப்பட்டுள்ளது. கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்புடன் இருக்க மாவட்ட நிா்வாகம் அறிவுருத்தி உள்ளது.

அடுத்த செய்தி