ஆப்நகரம்

மாவா டீ மாஸ்டர், போலீஸ் காட்டிய அதிரடி!

சென்னையில் மாவா விற்பனை அதிகரித்துக் காணப்படும் நிலையில், அவ்வப்போது காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Samayam Tamil 17 Oct 2019, 9:24 am
சென்னையில் அதிகளவில் மாவா என்ற போதைப் பொருள் விற்கப்பட்டு வருகிறது. மாவா போதைப் பொருள் ஆந்திரா போன்ற மாநிலங்களிலிருந்து எளிதாகக் கடத்தி கொண்டுவரப்பட்ட சென்னை உள்பட நகரங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
Samayam Tamil 14_04_2019-inquary_19131676


சென்னையில் பல்வேறு இடங்களில் தடை செய்யப்பட்ட மாவா சட்ட விரோதமாக, விற்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அவ்வப்போது புகார்கள் எழுவதும், காவல்துறை அதிகாரிகள் மாவாவை கைப்பற்ற ஆய்வுகள் நடத்துவதும் வாடிக்கையாகிவிட்டது.

இந்நிலையில் சென்னை அமைந்தகரையில் மாவா புழக்கம் அதிகமாக இருப்பதாக காவல்துறைக்குத் தொடர்ந்து புகார்கள் எழுந்தன. அதிலும் குறிப்பாக அமைந்தகரை என் எஸ் கே நகரில் உள்ள ஒரு டீக் கடையில் இந்த மாவா விற்பனை சர்வ சாதாரணமாக நடப்பதாகக் காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது.

புகாரையடுத்து, காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள டீக் கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது தனியார் டீ கடை ஒன்றில், மாவா விற்கப்பட்டதை காவல்துறையினர் கண்காணித்தனர். அதை தொடர்ந்து, அந்த கடையில் விற்பனை செய்பவரை விசாரித்தபோது.

அவர் பெயர் பாண்டியன் என்ற பாண்டா என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த காவல்துறையினர், மாவா எங்கிருந்து வருகிறது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாவா விற்பனைக்கும் சம்பந்தப்பட்ட கடை உரிமையாளருக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது விசாரணையில் தெரியவந்தது.

அடுத்த செய்தி