ஆப்நகரம்

உழைப்பாளர் தினத்தில் மது விற்பனைக்கு அனுமதி கிடையாது- சென்னை ஆட்சியர்

சென்னையில் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு எந்த வகையிலும் மது விற்பனை செயல்படாது என மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Samayam Tamil 25 Apr 2019, 10:15 pm
Samayam Tamil மே 1ம் தேதி மதுபானக் கடைகள் செயல்படாது- ஆட்சியர் உத்தரவு
மே 1ம் தேதி மதுபானக் கடைகள் செயல்படாது- ஆட்சியர் உத்தரவு
மே 1ம் தேதி உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு சென்னையில் டாஸ்மாக் மதுபானக் கடைகள் எதுவும் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் ஏ. சண்முக சுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கையில், டாஸ்மாக் மதுபான விற்பனையகம், மது அருந்தும் வசதியுடன் கூடிய கடைகள், பார்களுடன் கூடிய உணவகங்கள் எதுவும் செயல்படாது.

தவிர, சென்னையில் தமிழ்நாடு சுற்றுலா துறையிடம் உரிமம் பெற்று இயங்கும் உணவகங்களுடன் கூடிய பார்களும் செயல்படாமல் இருக்கும். இதனால் நகரத்தின் எந்த பகுதியிலும் மது விற்பனை இருக்காது.

தமிழக அரசின் இந்த உத்தரவை மீறி, மே 1ம் தேதி முறைகேடான வகையில் மதுபான விற்பனையில் யாரேனும் ஈடுபட்டால் சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஆட்சியர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி