ஆப்நகரம்

Samayam Tamil Exclusive: மயிலாடுதுறைக்கு வருகிறது மருத்துவக் கல்லூரி- மயிலாடுதுறை எம்.எல்.ஏ.

மயிலாடுதுறை எம்.எல்.ஏ. வீ.ராதாகிருஷ்ணன் சமயம் தமிழுக்கு அளித்த பிரத்யேக தகவல்...

Samayam Tamil 24 Mar 2020, 12:11 pm
தமிழகத்தின் 38ஆவது மாவட்டமாக அறிவிக்கப்படவுள்ளது மயிலாடுதுறை. இன்று சட்டமன்றத்தில் ஆற்றிய உரையின் போது மயிலாடுதுறையை தலைநகராகக் கொண்டு புதிய மாவட்டம் அறிவிக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். ஏறக்குறைய 30 ஆண்டுகாலக் கோரிக்கையான இதனை இன்று சட்டமன்றத்தில் அறிவித்ததைத் தொடர்ந்து மயிலாடுதுறைப் பகுதி மக்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
Samayam Tamil mayiaduthurai


இதுகுறித்து மேலும் அறிந்துகொள்ள மயிலாடுதுறைத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வீ.ராதாகிருஷ்ணனிடம் தொடர்பு கொண்டு பேசியது சமயம் தமிழ்.

அவர் தெரிவித்ததாவது, “ எவ்வளவு ஆண்டுகால போராட்டம் இது. தற்போது அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இது எங்களுக்கு ஒரு பெரும் வரப்பிரசாதம். மயிலாடுதுறை, பூம்புகார் மக்கள் இனி மகிழ்ச்சியாக இருக்கலாம்” என்று தெரிவித்தார்.

வென்றது மாயூர யுத்தம்... தனி மாவட்டமானது மயிலாடுதுறை

மாவட்டமாக அறிவிக்கப்பட்ட பிறகு உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணிகள் தீவீரப்படுத்தப்படும். அதற்கான திட்டங்கள் ஏதும் தங்களிடம் இருக்கிறதா என்ற கேள்விக்கு பதிலளித்த சட்டமன்ற உறுப்பினர், “கடந்த சில வாரங்களாகவே அதற்கான இடம்பார்க்கும் வேலைகளில் ஈடுபட்டு வருகிறோம். தருமபுரம் ஆதீனம் தரப்பில் 36ஏக்கர் நிலம் இதற்காக இலவசமாக எங்களிடம் வழங்கப்பட்டுள்ளது” என்றும் தெரிவித்தார்.


புதிய கல்லூரிகள் திறக்கப்பட வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு, “தருமபுர ஆதீனம் வழங்கிய இந்த 36 ஏக்கர் நிலம் மருத்துவக்கல்லூரி அமைப்பதற்காக வழங்கப்பட்டுள்ளது” என்றும் தெரிவித்தார்.

மயிலாடுதுறை மக்கள் மாவட்டத் தலைநகரை அடைய ஏறக்குறைய 3 மணி நேரப் பயணம் மேற்கொள்ள வேண்டி இருந்த நிலையில் இந்த அறிவிப்பால பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது மட்டும் உண்மை.

அடுத்த செய்தி