கன்னியாகுமரி மாவட்ட எல்லையான காவல்கிணறு பகுதியில் பிரதமா் நரேந்திர மோடிக்கு எதிராக கறுப்புக்கொடி காட்டும் போராட்டம் நடத்திய மதிமுக பொதுச் செயலாளா் வைக்கோ கைது செய்யப்பட்டுள்ளாா்.
கன்னியாகுமரிக்கு இன்று வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆரல்வாய்மொழி பகுதியில் கறுப்புக் கொடி காட்டப்போவதாக மதிமுக பொதுச் செயலாளா் வைகோ அறிவித்திருந்தார். இதனைத் தொடா்ந்து ஆரல்வாய்மொழியில் நேற்று இரவு முதலே பாரதிய ஜனதா மற்றும் இந்து முன்னணி, விஷ்வ இந்து பரிஷத் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் குவிந்தனர்.
மேலும் பிரதமருக்கு எதிராக போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ள வைகோவுக்கு எதிராக நாங்கள் போராட்டம் நடத்துவோம் என்று இந்த அமைப்புகள், பாஜகவினா் தொிவித்தனா். இது பற்றி தகவல் அறிந்ததும் காவல் துறையினரும் அங்கு குவிக்கப்பட்டனர். இதனால் ஆரல்வாய்மொழியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
இந்த நிலையில் இன்று திட்டமிட்டபடி அங்கு மதிமுகவினர் குவிந்தனர். இதனிடையே அங்குவந்த வைகோ கறுப்பு பலூன்களை பறக்கவிட்டும் கறுப்பு கொடி காட்டியும் போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் மதிமுக மற்றும் பாஜக தொண்டர்களிடையே மோதல் ஏற்பட்டது.
மோதத் தொடா்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல் துறையினா் தடியடி நடத்தி இருதரப்பினரையும் விரட்டியடித்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் வைகோ போராட்டம் நடத்திய பகுதி, முதல்வா் பழனிசாமி கன்னியாகுமரிக்கு வரும் பகுதி என்பதால் போராட்டத்தை விரைந்து முடித்துக் கொள்ளுமாறு மதிமுகவினருக்கு காவல் துறையினா் அறிவுறுத்தினாா். ஆனால், போராட்டம் தொடா்ந்த நிலையில் வைகோ உள்பட போராட்டத்தில் ஈடுபட்ட மதிமுகவினா் கூண்டோடு கைது செய்யப்பட்டனா்.
கன்னியாகுமரிக்கு இன்று வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆரல்வாய்மொழி பகுதியில் கறுப்புக் கொடி காட்டப்போவதாக மதிமுக பொதுச் செயலாளா் வைகோ அறிவித்திருந்தார். இதனைத் தொடா்ந்து ஆரல்வாய்மொழியில் நேற்று இரவு முதலே பாரதிய ஜனதா மற்றும் இந்து முன்னணி, விஷ்வ இந்து பரிஷத் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் குவிந்தனர்.
மேலும் பிரதமருக்கு எதிராக போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ள வைகோவுக்கு எதிராக நாங்கள் போராட்டம் நடத்துவோம் என்று இந்த அமைப்புகள், பாஜகவினா் தொிவித்தனா். இது பற்றி தகவல் அறிந்ததும் காவல் துறையினரும் அங்கு குவிக்கப்பட்டனர். இதனால் ஆரல்வாய்மொழியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
இந்த நிலையில் இன்று திட்டமிட்டபடி அங்கு மதிமுகவினர் குவிந்தனர். இதனிடையே அங்குவந்த வைகோ கறுப்பு பலூன்களை பறக்கவிட்டும் கறுப்பு கொடி காட்டியும் போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் மதிமுக மற்றும் பாஜக தொண்டர்களிடையே மோதல் ஏற்பட்டது.
மோதத் தொடா்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல் துறையினா் தடியடி நடத்தி இருதரப்பினரையும் விரட்டியடித்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் வைகோ போராட்டம் நடத்திய பகுதி, முதல்வா் பழனிசாமி கன்னியாகுமரிக்கு வரும் பகுதி என்பதால் போராட்டத்தை விரைந்து முடித்துக் கொள்ளுமாறு மதிமுகவினருக்கு காவல் துறையினா் அறிவுறுத்தினாா். ஆனால், போராட்டம் தொடா்ந்த நிலையில் வைகோ உள்பட போராட்டத்தில் ஈடுபட்ட மதிமுகவினா் கூண்டோடு கைது செய்யப்பட்டனா்.