ஆப்நகரம்

தேசத் துரோக வழக்கு:வைகோ விடுதலை..!

முந்தைய திமுக ஆட்சியில் தொடரப்பட்ட தேசத்துரோக வழக்கில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

TNN 20 Oct 2016, 4:04 pm
முந்தைய திமுக ஆட்சியில் தொடரப்பட்ட தேசத்துரோக வழக்கில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
Samayam Tamil mdmk leader vaiko released from sedition case
தேசத் துரோக வழக்கு:வைகோ விடுதலை..!


கடந்த 2009-ஆம் ஆண்டு சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடந்த ” ஈழத்தில் நடப்பது என்ன?” என்ற கருத்தரங்கில்,மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டு பேசினார்.அப்போது தனது உரையில் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக கூறி வைகோ மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த எட்டு ஆண்டுகளாக சென்னை மூன்றாவது கூடுதல் குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.கியூ பிரிவு காவல்துறையினர் வைகோ மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை நிரூபிக்கவில்லை என கூறி வைகோவை இந்த வழக்கிலிருந்து விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

தீர்ப்பிற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வைகோ,”திமுக தலைவர் கருணாநிதி ஆட்சிக்காலத்தில் என் மீது போடப்பட்ட தேசத் துரோக வழக்கில் என்னை விடுதலை செய்துள்ளனர்.இந்த தீர்ப்பு இளைஞர்களிடையே விழிப்புணர்வை ஏற்படும் வகையில் அமைந்துள்ளது.”என தெரிவித்தார்.

English Summary:

MDMK leader Vaiko released from sedition case

அடுத்த செய்தி