ஆப்நகரம்

Draft Electricity Bill 2020: மின்சார சட்ட திருத்த மசோதா 2020ஆல் இவ்வளவு ஆபத்தா? - கொதித்தெழுந்த வைகோ!

ஏழை, எளிய மக்களுக்கு உதவி செய்யும் வகையில் மின்சார சட்ட திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.

Samayam Tamil 3 May 2020, 3:10 pm
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மத்திய அரசு மின்சார சட்ட திருத்த மசோதா - 2020 கொண்டு வந்து கடந்த ஏப்ரல் 17ஆம் தேதி அன்று அனைத்து மாநிலங்களின் கருத்தை அறிவதற்காக அனுப்பியுள்ளது. இந்த மசோதாவில் மாநில மின்சார வாரியங்களைப் பிரித்து வெறும் விநியோக நிறுவனங்களாக மாற்றும் வகையில் விதிகள் இடம்பெற்றுள்ளன. நாட்டின் மின் உற்பத்தியை தனியார் நிறுவனங்களுக்கு தாரை வார்த்துவிட்டால் உற்பத்தி செய்த மின்சாரத்தை முழுக்க முழுக்க அவர்களே விநியோக்கும் உரிமையை பெற்றுவிடுவார்கள். மேலும் மின் நுகர்வோர்களிடம் கட்டணம் வசூலிக்கும் உரிமையும் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்படும்.
Samayam Tamil வைகோ


இதன் காரணமாக மின்சாரக் கட்டணத்தை தீர்மானிக்கும் அதிகாரமும் தனியாருக்கு சென்றுவிடும். இதனால் சேவைத் துறை என்பது வர்த்தகமாக மாற்றப்படுவதுடன் மின் கட்டணமும் உயரும் ஆபத்து ஏற்படும். இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படும்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எப்படி இருக்கிறது? - லேட்டஸ்ட் நிலவரம்!

மிகவும் நலிவுற்ற ஏழைகள், தாழ்த்தப்பட்டோரின் குடிசைகள், கைத்தறி நெசவாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரமும் ரத்தாகும். கொரோனா ஊரடங்கில் நாட்டின் அனைத்து துறைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் வஞ்சகமாக பாஜக அரசு இந்த மின்சார சட்ட முன்வடிவை சட்டமாக்க துடிக்கிறது. தமிழகத்தில் இலவச மின்சாரத்தை பெற போராடி 64 விவசாயிகள் பலியாகினர்.

விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று தமிழக முதலமைச்சராக இருந்த கருணாநிதி இலவச மின்சாரத்தை அளித்தார். இதனால் விவசாயிகள் நீர்வளங்களைப் பயன்படுத்தி மக்களுக்கு தேவையான உணவு தானியங்கள் மற்றும் காய்கறிகள் உற்பத்தி செய்து சந்தைக்கு கொண்டு வருகின்றனர்.
வைகோ வெளியிட்ட அறிக்கை
தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டாலும் வேளாண்மை தொழிலில் விவசாயிகள் இன்னும் நீடிக்க இலவச மின்சாரம் ஒரு காரணமாகும். இதனை ரத்து செய்வது மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளுக்குச் செய்யும் துரோகமாகும். ஏற்கனவே கடனிலும் வறுமையிலும் விவசாயிகள் சிக்கி தவித்துக் கொண்டிருக்கின்றனர்.

புற்றுநோயாளிக்கு இப்படியொரு அதிர்ச்சி; அச்சத்தில் மருத்துவர் - கோவையில் பரபரப்பு!

இந்த சூழலில் மின் கட்டணத்தை எப்படிச் செலுத்துவார்கள்? நெசவுத் தொழிலை நம்பி இருக்கும் கைத்தறி நெசவாளர்கள் கடும் தொழில் நெருக்கடிகளை சந்தித்து வரும் நிலையில் இலவச மின்சாரத்தை ரத்து செய்வது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாகும்.

எனவே மின்சார சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு திரும்ப பெற தமிழக அரசு அறிவுறுத்த வேண்டும். வேளாண்மை, கைத்தறி நெசவுத் தொழில்களை பாதுகாக்கும் வகையிலும் ஏழை எளிய மக்களுக்கு உதவிடும் வகையில் மின்சார சட்டத் திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

அடுத்த செய்தி