ஆப்நகரம்

மக்கள் நலக் கூட்டணியில் இருந்து மதிமுக விலகல்: வைகோ அறிவிப்பு

மக்கள் நலக் கூட்டணியில் இருந்து மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் வெளியேறுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.

TNN 27 Dec 2016, 1:00 pm
சென்னை: மக்கள் நலக் கூட்டணியில் இருந்து மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் வெளியேறுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.
Samayam Tamil mdmk quits alliance with makkal nala koottani says vaiko
மக்கள் நலக் கூட்டணியில் இருந்து மதிமுக விலகல்: வைகோ அறிவிப்பு


சென்னையில் அவைத் தலைவர் திருப்பூர் சு. துரைசாமி தலைமையில் நடைபெற்ற மதிமுக உயர்நிலைக் குழு கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களிடம் வைகோ இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

மக்கள் நலக் கூட்டணியில் இருந்து விலகினாலும், மநகூ தலைவர்களிடம் கொண்டுள்ள நட்புறவு தொடரும் என வைகோ தெரிவித்துள்ளார். கடந்த சில மாதங்களாக நிலவி வந்த குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் வைகோ இதனை அறிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின் போது, மக்கள் நலனுக்காக ஒருமித்த கொள்கைகளை கொண்டதன் அடிப்படையில், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, தேமுதிக, உள்ளிட்ட கட்சிகள் ஒன்றாக கைக்கோர்த்து கூட்டணி அமைத்தது.

ஐவர் கூட்டணியாக அறிமுகப்படுத்திக் கொண்ட இந்த மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டவர் வைகோ. தேர்தலில் தோல்வியை தழுவிய பிறகு இந்த கட்சிகளுக்குள் ஏற்பட்ட கொள்கை, கருத்து வேறுபாடுகள் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தகவல்கள் கூறப்படுகிறது.

மத்திய அரசின் பண மதிப்பு இழப்பு அறிவிப்பைத் தொடர்ந்து மக்கள் நலக் கூட்டணி தலைவர்களின் மாறுபட்ட கருத்து தான் காரணம் என கருதப்படுகிறது. எனினும், மநகூ-வில் இருந்து விலகியதற்கான காரணம் குறித்து பதில் கூற வைகோ மறுத்துவிட்டார்.

MDMK secretary Vaiko announced today that, their party MDMK quits alliance with Makkal Nala Kootani which formed during Assembly Election in Tamilnadu. Makkal Nala Kootani had comprised of Indian Communist party, Marxist Communist party, Vidudhalai Siruthaigal Party, DMDK, MDMK alliance.

அடுத்த செய்தி