ஆப்நகரம்

ஜல்லிக்கட்டு போட்டியை பாரம்பரிய விழாவாக நடத்த நடவடிக்கை: அமைச்சர் விஜயபாஸ்கர்!

காளைகளை ஆன்லைனில் பதிவு செய்வது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள், கால்நடை துறை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்

Samayam Tamil 10 Jan 2020, 4:51 pm
விராலிமலை: ஜல்லிக்கட்டு போட்டியாக இல்லாமல் பாதுகாப்பான பாரம்பரிய விழாவாக நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil விஜயபாஸ்கர்
விஜயபாஸ்கர்


புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை யில் வரும் 19ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடக்க உள்ளது. இதனை முன்னிட்டு, பட்டமரத்தான் கோயில் திடலில் நடக்கும் ஜல்லிக்கட்டு விழாவிற்கான கால்கோள் விழா இன்று நடந்தது. தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இதனை தொடங்கி வைத்தார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், “விராலிமலையில் ஜல்லிக்கட்டு போட்டி கடந்த ஆண்டு கின்னஸ் சாதனை படைப்பதற்காக நடைபெற்றது. இந்த ஆண்டு அதே போன்று ஜல்லிக்கட்டை போட்டியாக நடத்தாமல் ஜல்லிக்கட்டு போட்டியை விளையாட்டாக நடத்துவதற்காக தரமான காளைகள் தேர்வு செய்யப்பட்டு 600 காளைகள் மட்டுமே ஜல்லிக்கட்டில் கலந்துகொள்ள உள்ளது.

அம்பேத்கருக்கு தூக்குத் தண்டனையா: அதிர வைத்த முதல்வர்!

ஜல்லிக்கட்டை போட்டியாக நடத்தாமல் பாரம்பரிய விளையாட்டாக நடத்துவதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழகத்தில் நடக்கும் அனைத்து ஜல்லிக்கட்டில் போட்டிகளிலும் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக கால்நடை ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட உள்ளது.


மேலும் காயமடைந்த வீரர்கள் மற்றும் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சுகாதாரத்துறை சார்பில் சிறப்பு சிகிச்சை முகாம்கள் ஜல்லிக்கட்டு திடலில் அமைக்கப்பட உள்ளது.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு காளையை அடக்கப்போகும் இளைஞர்கள் கவனத்துக்கு?

காளைகளை ஆன்லைனில் பதிவு செய்வது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள், கால்நடை துறை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், காளைகள் வளர்ப்போர் மற்றும் விளையாட்டு வீரர்கள் எண்ணத்திற்கு ஏற்ப இது தொடர்பாக வழக்கம் போல் உள்ள நடைமுறையை பின்பற்றுவதற்கான அறிவிப்பை தமிழக முதல்வர் விரைவில் வெளியிடுவார்” இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி