ஆப்நகரம்

டெலி மெடிசின் வசதியுடன் முதல் அரசு மருத்துவக் கல்லூரி!

தமிழகத்தின் முதல் முறையாக அரசு மருத்துவக் கல்லூரிக்கு டெலி மெடிசின் வசதி கிடைத்துள்ளது.

Samayam Tamil 31 Mar 2018, 7:35 pm
தமிழகத்தின் முதல் முறையாக அரசு மருத்துவக் கல்லூரிக்கு டெலி மெடிசின் வசதி கிடைத்துள்ளது.
Samayam Tamil ViewImage


கன்னியாகுமரி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரியில் இன்று டெலி மெடிசின் வசதி தொடங்கப்பட்டது. ரூ.20 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட இந்த டெலி மெடிசின் வசதி அமைக்கப்பட்டுள்ளது. அதிமுக எம்.பி., விஜயகுமார் இன்று இந்த வசதியைத் தொடங்கிவைத்துள்ளார்.

இத்துடன் ரூ.35 லட்சம் செலவில் டயாலிசிஸ் மிஷின், ரூ.5 லட்சம் செலவில் புதிய ஆபரேஷன் தியேட்டர் உள்ளிட்ட ரூ.60 லட்சம் மதிப்பிலான திட்டங்களை வசதிகளும் இந்த மருத்துவமனைக்குக் கிடைத்துள்ளன.
தமிழகத்திலேயே முதலாவதாக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரியில் டெலி மெடிசின் வசதி கிடைத்துள்ளது. இதன் மூலம் உலகின் எந்தப் பகுதியில் உள்ள மருத்துவர்களுடனும் கலந்துரையாடி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியும். மருத்துவக் கல்லூரி மாணவர்கள் உலகின் எந்தப் பகுதியில் மூலையிலும் உள்ள மருத்துவ வகுப்புகளையும் நேரடியாகப் பார்க்கலாம்.

அடுத்த செய்தி