சென்னை: கரூரில் மருத்துவக் கல்லூரி கட்ட தடையாக இருப்பதாக முன்னாள் அமைச்சரும், அரவக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினருமான செந்தில் பாலாஜியின் புகார் குறித்து போக்குவரத்து துறை அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்துள்ளார்.
கரூர் மாவட்டம் குச்சிப்பாளயத்தில் மருத்துவக் கல்லூரி கட்ட ஜெயலலிதா முதல்வராக இருந்த பொழுது சுமார் ரூ.300 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. நிதி ஒதுக்கப்பட்டு, அடிக்கல் நாட்டப்பட்டும் இன்னும் வேலை தொடங்கப்படவில்லை என அதிமுக அரவக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினர் செந்தில்பாலாஜி புகார் தெரிவித்திருந்தார். இத் திட்டம் செயல்வடிவம் பெறாததற்கு போக்குவரத்து துறை அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கரும், தம்பிதுரையும் தான் காரணம் என்றும் அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில், செந்தில்பாலாஜியின் இக்குற்றச்சாட்டை மறுத்துள்ள எம்ஆர் விஜயபாஸ்கர், "கரூர் மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரி கட்டப்பட வேண்டுமென்பதே எனது விருப்பம். மருத்துவக் கல்லூரி கட்டுவது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அதனால் தான் கட்டுமானப் பணியை மேற்கொள்ள முடியவில்லை என விளக்கம் அளித்துள்ளார்.
மேலும், செந்தில்பாலாஜி, தான் அமைச்சராக இருக்கும் பொழுது இது குறித்து நடவடிக்கை எடுத்திருக்க வேண்டியது தானே என்றும் எம்ஆர் விஜயபாஸ்கர் கேள்வி எழுப்பியுள்ளார்.
Medical college in Karur: MR Vijayabaskar explains Senthil balaji's complaint
கரூர் மாவட்டம் குச்சிப்பாளயத்தில் மருத்துவக் கல்லூரி கட்ட ஜெயலலிதா முதல்வராக இருந்த பொழுது சுமார் ரூ.300 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. நிதி ஒதுக்கப்பட்டு, அடிக்கல் நாட்டப்பட்டும் இன்னும் வேலை தொடங்கப்படவில்லை என அதிமுக அரவக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினர் செந்தில்பாலாஜி புகார் தெரிவித்திருந்தார். இத் திட்டம் செயல்வடிவம் பெறாததற்கு போக்குவரத்து துறை அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கரும், தம்பிதுரையும் தான் காரணம் என்றும் அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில், செந்தில்பாலாஜியின் இக்குற்றச்சாட்டை மறுத்துள்ள எம்ஆர் விஜயபாஸ்கர், "கரூர் மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரி கட்டப்பட வேண்டுமென்பதே எனது விருப்பம். மருத்துவக் கல்லூரி கட்டுவது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அதனால் தான் கட்டுமானப் பணியை மேற்கொள்ள முடியவில்லை என விளக்கம் அளித்துள்ளார்.
மேலும், செந்தில்பாலாஜி, தான் அமைச்சராக இருக்கும் பொழுது இது குறித்து நடவடிக்கை எடுத்திருக்க வேண்டியது தானே என்றும் எம்ஆர் விஜயபாஸ்கர் கேள்வி எழுப்பியுள்ளார்.
Medical college in Karur: MR Vijayabaskar explains Senthil balaji's complaint