ஆப்நகரம்

மருத்துவ கலந்தாய்வு: 11 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் சேர்க்கப்படுமா?

மருத்துவ கலந்தாய்வில் 11 புதிய அரசு மருத்துவ கல்லூரிகளைச் சேர்க்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Samayam Tamil 28 Nov 2020, 11:52 am
தமிழ்நாட்டில் 2020-21-ம் கல்வியாண்டு மருத்துவப்படிப்பில் சேருவதற்கான கலந்தாய்வு நவம்பர் 18ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு மூலம் மருத்துவப்படிப்பு கலந்தாய்வு நடத்தப்பட்டது. அதில் இருந்த 405 இடங்களில் 399 இடங்கள் நிரம்பின.
Samayam Tamil counselling


பொது பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு 23ஆம் தேதி தொடங்கியது. நிவர் புயல் காரணமாக நிறுத்தப்பட்ட கலந்தாய்வு 30ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 10ஆம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த வாசுதேவா என்பவர், மருத்துவ கலந்தாய்வில் 11 புதிய அரசு மருத்துவ கல்லூரிகளைச் சேர்க்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார்.

பொது முடக்கத்தில் இம்முறை எதற்கெல்லாம் அனுமதி தெரியுமா?

அவரது மனுவில், “11 புதிய அரசு மருத்துவ கல்லூரிகளை நடப்பு கலந்தாய்வில் சேர்க்காதது ஏற்கத்தக்கதல்ல. 11 கல்லூரிகளைச் சேர்த்தால் இட ஒதுக்கீடு சதவீதம் அதிகரித்து பல மாணவர்கள் பயனடைவர். எனவே, 2020- 2021- ஆம் ஆண்டுக்கான எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வில் 11 புதிய அரசு மருத்துவ கல்லூரிகளைச் சேர்க்க வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி