ஆப்நகரம்

மே 30ஆம் தேதி மருத்து கடைகள் முழு அடைப்புப் போராட்டம்

இணையதளங்கள் வாயிலாக மருந்துப் பொருட்கள் விற்பதை எதிர்த்து வரும் 30ஆம் தேதி முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்போவதாக தமிழ்நாடு மருத்து வணிகர்கள் அறிவித்துள்ளனர்.

TNN 22 May 2017, 1:59 pm
சென்னை: இணையதளங்கள் வாயிலாக மருந்துப் பொருட்கள் விற்பதை எதிர்த்து வரும் 30ஆம் தேதி முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்போவதாக தமிழ்நாடு மருத்து வணிகர்கள் அறிவித்துள்ளனர்.
Samayam Tamil medical shops strike on may 30
மே 30ஆம் தேதி மருத்து கடைகள் முழு அடைப்புப் போராட்டம்


சில நிறுவனங்கள் அனுமதியின்றி இணையதளம் மூலமாகவே மருந்துகளை விற்பனை செய்து வருகின்றனர். இதனை தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி நாடு முழுவதும் மருந்து வணிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

தமிழகத்தில் உள்ள 30 ஆயிரம் மருந்தகங்கள் வரும் மே 30ஆம் தேதி மூடப்படும் என தமிழ்நாடு மருத்து வணிகர்கள் சங்கம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கத்தின் மாநில செயலாளர் செல்வம் நேற்று திருச்சியில் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

அடுத்த செய்தி