ஆப்நகரம்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மருந்துக்கடைகள் நாளை அடைப்பு

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க வலியுறுத்தி நடக்கும் போராட்டத்தில் பங்குபெறும் விதமாக மருந்துக்கடைகள் நாளை இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

TNN 19 Jan 2017, 8:08 pm
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க வலியுறுத்தி நடக்கும் போராட்டத்தில் பங்குபெறும் விதமாக மருந்துக்கடைகள் நாளை இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil medical shops to be closed tomorrow supporting jallikattu protests
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மருந்துக்கடைகள் நாளை அடைப்பு


ஜல்லிக்கட்டு நடத்த நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டம் வலுத்து வருகிறது. போராட்டக்காரர்களின் கோரிக்கையின் எதிரொலியாக தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துள்ளார். அப்போது, ஜல்லிக்கட்டு நடத்த ஏதுவாக அவசரச்சட்டம் இயற்ற வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். அதற்கு பிரதமர் அளித்த பதிலில் திருப்தி அளிக்கவில்லை என்று போராட்டக்காரர்கள் கூறியுள்ளனர்.

இந்நிலையில், இப்போராட்டத்திற்கு ஆதரவு அளிக்கும் விதமாக மருந்துக்கடைகள் அனைத்தும் நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்காது என்று மருந்துக்கடைகள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

அடுத்த செய்தி