ஆப்நகரம்

இருதய குழாய் அடைப்பு நீக்கியை அதிக விலையில் விற்றால் புகார் அளிக்கலாம்: தமிழக அரசு

இருதய குழாய் அடைப்பு நீக்கி தட்டுப்பாடு நிலவினாலோ அல்லது அதிக விலையில் விற்றால் புகார் அளிக்கலாம் என்று தமிழக அரசு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் முதன்மைச் செயலர் தெரிவித்துள்ளார்.

TNN 21 Jun 2017, 3:17 pm
சென்னை : இருதய குழாய் அடைப்பு நீக்கி தட்டுப்பாடு நிலவினாலோ அல்லது அதிக விலையில் விற்றால் புகார் அளிக்கலாம் என்று தமிழக அரசு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் முதன்மைச் செயலர் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil meeting of stakeholders of cardiac stents
இருதய குழாய் அடைப்பு நீக்கியை அதிக விலையில் விற்றால் புகார் அளிக்கலாம்: தமிழக அரசு


இதுகுறித்து தமிழக அரசு வெளியிடுள்ள செய்தி குறிப்பில், " தமிழ்நாடு அரசு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் முதன்மைச் செயலர் அவர்களின் தலைமையில், இருதய குழாய் அடைப்பு நீக்கி (Cardiac Stents) இறக்குமதியாளர்கள், விநியோகஸ்தர்கள், மருத்துவமனை பிரதிநிதிகள் மற்றும் தமிழ்நாடு அரசு மருந்துக் கட்டுப்பாடு துறை அதிகாரிகளுடன் கலந்துரையாடல் கூட்டம் நேற்று நடைபெற்றது.

கூட்டத்தின் போது முதன்மைச் செயலர் அவர்கள், மருந்துக் கட்டுப்பாடு துறை இருதய குழாய் அடைப்பு நீக்கி அதன் நிர்ணயிக்கப்பட்ட விலைக்குள் மக்களுக்கு தங்கு தடையின்றி கிடைப்பது தொடர்பாக கண்காணித்து வருவதாகவும், மேலும் இது தொடர்பாக மருந்து விலை கட்டுப்பாடு ஆணை 2013-ன் விதிமுறைகளை அனைத்து பங்குதாரர்கள் பின்பற்றவும், செயற்கை தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கச் செய்யவும் அறிவுரை வழங்கினார்.

மேலும், இது குறித்து முதன்மைச் செயலர் கூறுகையில், இதுவரையில் நம் மாநிலத்தில் எவ்வித புகாரும் பெறப்படவில்லை என்றும், இருப்பினும் இருதய குழாய் நீக்கி தட்டுப்பாடு மற்றும் விலை அதிகமாக வசூலிக்கப்படின், இதுகுறித்து புகார் தெரிவிக்க, பொதுமக்கள் கீழ்க்கண்ட முறைகள் மூலம் தெரிவிக்கலாம் என்றும் கூறினார்.
1. www.nppaindia.nic.in என்ற வலைதளத்தில் “Pharma JanSamadhan" என்ற குறை தீர்ப்பு அமைப்பு
2. 1800 111 255 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்
3. 99582 17773 என்ற வாட்ஸ் அப் எண்
4. 044 – 24321830 என்ற தொலைபேசி எண்"என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

அடுத்த செய்தி