ஆப்நகரம்

மேகதாட்டு அணை: முதல்வருக்கு கர்நாடக நீர்பாசனத்துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார் கடிதம்!

மேகதாட்டு அணை தொடர்பாக விவாதிக்க தங்களை சந்திக்க நேரம் வழங்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கர்நாடகா நீர்பாசனத்துறை அமைச்சர் டிகே சிவக்குமார் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

Samayam Tamil 6 Dec 2018, 1:34 pm
மேகதாட்டு அணை தொடர்பாக விவாதிக்க தங்களை சந்திக்க நேரம் வழங்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கர்நாடகா நீர்பாசனத்துறை அமைச்சர் டிகே சிவக்குமார் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
Samayam Tamil mini


காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாட்டு பகுதியில் அணை கட்டுவதற்கு கர்நாடகா முயற்சி செய்து வருகிறது. இதற்கான அறிக்கையை மத்திய நீர்வள ஆணையத்திற்கு கர்நாடகா அரசு அனுப்பி வைத்தது. இதற்கு, நீர்வள ஆணையம், விரிவான அறிக்கை தாக்கல் செய்ய அனுமதியும் அளித்துள்ளது.

இந்த அனுமதியை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதற்கிடையில், மேகதாட்டு அணையின் திட்ட அறிக்கையை தயாரிப்பதற்கான உயர்மட்டக்குழுவின் ஆலோசனைக் கூட்டம் இன்று கர்நாடகா முதல்வர் குமாரசாமி தலைமையில் நடக்கிறது.

இந்த நிலையில், மேகதாது அணை தொடர்பாக விவாதிக்க தங்களை சந்திக்க நேரம் வழங்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கர்நாடகா நீர்பாசனத்துறை அமைச்சர் டிகே சிவக்குமார் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: உண்மையில், தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவுக்கு வாழ்வாதாரமாகா இருப்பது காவிரி தான். இரு மாநில மக்களும் இதற்கு நிரந்தர தீர்வு காண விரும்புகின்றனர்.

இதன் காரணமாக, மேகதாட்டு அணை விவகாரம் தொடர்பாக கர்நாடகா அரசு இணக்கமான தீர்வு காண விரும்புகிறது. இது குறித்து விவாதிக்க உங்களது நேரம் வேண்டும் அவர் எழுதிய கடித்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த கடிதத்திற்கு பதிலளிக்கும் வகையில், அமைச்சர் சிவி சண்முகம் கூறுகையில், கர்நாடகாவுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளதால், பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பில்லை என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி